பாகம் 40

6.5K 221 77
                                    

பாலாவும் சுஜியும் தன்னை நோக்கி வருவதைக் கண்டு பதற்றம்  அடைந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் முகத்தை   உர்ரென்று வைத்துக் கொண்டான்.

கிருஷ் இங்க என்ன பண்ற.. அம்மா உங்கிட்ட பேசனும்னு சொன்னாங்க.. வா என்று அழைத்தான் பாலா..
அவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை..சுஜியின் கண்கள் அழுது சிவந்திருந்ததை தெளிவாக காட்டின..

" அம்மானா ஜானகியம்மாவ சொல்றீங்களா.. " என்றான் கோபமாக

அவன் பேச்சில் பொறுமை இழந்தவனாக " கிருஷ் இப்ப உனக்கென்ன பிரச்சனை..ஏன் என்ன தண்டிக்கிறேன் என்ற பேர்ல உன்ன நீயே கஷ்டப் படுத்திக்கற.. கொஞ்சம் புரிஞ்சிக்கோடா " என்றான் பாலா..

உங்கள கஷ்டப்படுத்த எனக்கென்ன உரிமையிருக்கு.. நான் என்ன உங்க கூட பொறந்த தம்பியா என்ன ? என்றான் ஏளனமாக..

பாலாவுக்கு வார்த்தை வர மறுத்தது..கடந்த இரண்டு நாளாகவே கிருஷ் வார்த்தையால் அவன் மனதை நோகடித்துக் கொண்டே இருந்தும் அவன் நிலையை புரிந்து கொண்டு அமைதியாகவே தான் இருந்தான். ஆனால் இப்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினான்.

தன்னை சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.. " கூடப் பொறந்தா தான் தம்பியாடா பைத்தியமே.. நீ நினைக்கறதே சரின்னு நினைக்காத கிருஷ்..  இப்ப என்ன நாங்க எல்லாரும் உன்ன வெறுக்கனும் அப்படி தான.. அதுக்காக தான இப்படி முட்டாள் மாறி நடந்துக்கிற. போ நீ எனக்கு வேணா. போ.. நீ என்ன உண்மையாவே என் அண்ணனா நினைச்சிருந்தா என்ன விட்டு போக உனக்கு மனசு வந்திருக்குமா..

அப்பவும் அந்த ஜானகியம்மா சொன்னமாறி தான நடந்துக்கற.. உனக்கு இந்தும்மா எப்படி போனா உனக்கென்ன ? ஆனா அவுங்க தான் உன்னை நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டு பிபி ஏறினது தான் மிச்சம்..   நீ கஷ்டப்படக் கூடாதுன்னு
அதக்கூட உங்கிட்ட சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு சகஜமா இருக்கிற மாறி நடச்சிட்டு இருக்காங்க..

அதப்பத்தி உனக்கென்ன கவலை.. அவுங்க உன்னோட அம்மா இல்லையே..  ச்சே " என்று தன் கைகளை வேகமாக மரத்தினில் குத்தினான்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now