பாகம் 31

6.4K 219 71
                                    

ஆர்வமாய் அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் " மாமா.. நான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லனும்.. " என்றான்

அவர் தலையாட்டவும் " மாமா நான் உங்கள ஏமாத்தனும்னு நினைக்கல.. அதான் இப்பவே சொல்லிறேன்..ஆனால் அப்ரோம் என்னோட அப்பா அம்மாவ குறை சொல்லக்கூடாது.." அவன் அவ்வாறு சொல்லவும் அனைவரும் அவனை விநோதமாக பார்க்க " என் அப்பா பேரு ஜோசப் அம்மா இந்திரா  நான் உங்க தங்கச்சி பையன் .. இப்ப சொல்லுங்க என்னை உங்க மருமகனா ஏத்துவிக்கிங்களா "என்றான் பாலா..

மாணிக்கமும் பருவதமும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள "
நான் உங்கள பிளேன் பண்ணி ஏமாத்திட்டேனு நினைக்கலாம்.. ஆனா அது உண்மையில்ல.. நான் உங்க வீட்டுக்கு வந்தபிறகு தான் இந்த உண்மை தெரியும்.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு தெரியல.. அதுக்காக என்னையும் மகதியையும் பிரிச்சிடாதிங்க.. அதே மாறி உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனைல நாங்க குறுக்க வரமாட்டோம்.. "

அவர்களுக்கு முன் அர்ஜூன் " இந்த விசயம் எங்கம்மாவுக்கு தெரியுமா ?" என்றான்

" தெரியும்...  அவுங்க தான் நம்ப ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேரனும்னு நினைச்சு இந்த ஐடியா கொடுத்தாங்க " என்றான் மென்னகையோடு..

அர்ஜூன் அவனை நம்பாமல் பார்க்க.. பாலாவோ " மாமா ப்ளீஸ் நான் மகிய நல்லா பார்த்துக்குவேன்.. என்னை நம்புங்க" என அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான்..

மாணிக்கம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தார்.. அந்த தருணம் மகதி இது எதுவும் தெரியாமல் காப்பிக் கப்புடன் வந்தாள்.

மகதிக்கு முன்பு போல பாலாவிடம் பேசும் தைரியமில்லை.. அவனும் தன்னை விரும்புகிறான் என்பதால் வந்த வெட்கமாக கூட இருக்கலாம்..
தன்னைப் பெண் பார்க்க வந்தது போல நினைத்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக அடிவைத்து மெதுவாக நடந்துவந்து " காபி எடுத்துக்கோங்க " என்றாள் தலையைக் குனிந்து கொண்டு

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now