பாகம் 34

6.2K 210 61
                                    

பயத்திலிருந்து மீண்ட மகதி பாலாவிடமிருந்து விலகி சற்றுத் தள்ளி நின்னாள்..

" என்ன மருமகளே.. பட்டப் பகலிலே உங்க வேலைய ஆரம்பிச்சிட்டிங்க போல.. சும்மா சொல்லக்கூடாது இந்து இரத்தம் தான உன் உடம்பிலயும் ஓடுது.. ச்சீ நல்ல வேளை என் பையன் தப்பிச்டான்.. அன்னைக்கு மயக்கம் போட்டது எதுனாலயோ " என முடிப்பதற்குள் மகதி ஜானகியை அடிக்க கையை ஓங்கி விட்டாள்..

அவள் கையை இலாவகமாக தட்டுவிட்டு " என்னடி உண்மைய சொன்னா கசக்குதா.. ஜோசப் இவனுக்கும் டிரெய்னிங் கொடுத்து தான் அனுப்பிருப்பான் போல.." என்றார் கேவலமான சிரிப்போடு..

" ச்சீ எங்க அத்தையும் மாமாவையும் பேசறதுக்கு உனக்கு மொத தகதி இருக்கா.. உன்னோட சுயநலத்துக்காக பெத்த பையனையே பலி கொடுக்க துணிஞ்ச நீயெல்லாம் மனுச ஜென்மமே இல்ல.. அத்தான் இந்தப் பொம்பளையோட நிழல முதிச்சாக்கூட பாவம் நம்பள ஒட்டிக்கும்.. வாங்க அத்தான்  போலாம் " என அவனின் கையைப்பிடித்து இழுத்தாள் மகதி.. அவளால் நகர்த்தக்கூட முடியவில்லை..அவள் பாலாவைப் பார்த்த போதுதான் தெரிந்தது அவன் கோபத்தின் உச்சியில் இருக்கிறான் என்பதை..

மகதியின் கையை உதறிவிட்டவன் " மகதி நீ கோவிலுக்குள்ள போ.. நான் பேசிட்டு வரேன் " என்று கோபமாக சொன்னான்.. மகதியும் அவனின் நிலையறிந்து சென்று விட்டாள்..

" இப்ப எதுக்கு அவ முன்னாடி சீன் போடுற.. என் மேல கோபம் வருதா முடிஞ்சா என்ன அடிச்சுக்கோ "எனக் கிண்டலாக பேசினார்

இதுவரை பொறுமையாக இருந்த பாலா ஓங்கி அவரது கன்னத்திலே அறைந்து விட்டான்..

" நானும் பொம்பளன்னு பொறுத்து போனா ஓவரா தான் பேசறீங்க.. என் அம்மாவோட அக்கானால தான் இவ்ளோ நாள் பொறுமையா இருந்தேன்.. அதுக்காக என்னோட அம்மாவையே குறை சொன்னா நான் அமைதியா இருக்க மாட்டேன்..உங்கனால எப்படி மகதி பத்திக்கூட தப்பா பேச முடியுது..எல்லாரும் உங்கள மாறியே இருக்க மாட்டாங்க.. இப்ப கூட அவ முன்னாடி அறைஞ்சா உங்க கௌரவம் குறைஞ்சிடும்னு தான் இப்ப அறைஞ்சேன்.. ஏன்னா எங்க அம்மாவோட வளர்ப்பு அப்படி.. மகதி சொன்னது சரி தான் உங்க நிழல் கூட என் மேல விழக்கூடாது.. குட் பாய் " என்று கூறி நகர்ந்து சென்றான்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now