பாகம் 28

6.4K 216 94
                                    

அண்ணா என்ன பண்ணிங்க உங்க பேர சொன்னவுடனே வெளிய ஓடி வந்து பார்த்தா .. ஆனா இப்ப மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு போரா.. அப்படி உங்களுக்குள்ள என்ன தான் பிரச்சனை.. நீங்க உண்மையா லவ் தான் பண்றீங்களா.. எனக்கே சந்தேகமா இருக்கு.. என்றான் அர்ஜுன்..

நீ சொல்றத பார்த்தா காதல்ல நிறைய அனுபவம் இருக்கும் போல இருக்கே.. என்றான் துடுக்காக..

அர்ஜூனின் தடுமாற்றத்தைப்
பார்த்து " நான் ஒன்னும் உன்னோட அண்ணனோ தம்பியோ இல்லையே.. அதான் சொல்லமாட்டிங்கற போல " என அழுத்துக் கொண்டான்..

அண்ணா ப்ளீஸ் இப்படி பேசாதிங்க..நான் சொல்றேன்.. எனக்கும் யார்கிட்டாச்சும் ஷேர் பண்ணனும்னு தோனுது.. எனக் கிணத்தடிக்கு கூட்டி சென்றான்..

சொல்லுங்க ரோமியோ உங்க காதல் கதைய கேக்க ஆவலா இருக்கேன்.. என்று ஒய்யாரமாக கிணத்து மேட்டில் அமர்ந்து கொண்டு கேட்டான்..

அர்ஜூன் வெற்றுச் சிரிப்போடு ஆரம்பித்தான்.. அவ பேரு சுஜித்ரா.. எங்க காலேஜ்க்கு பக்கத்துல இருக்கிற லேடிஸ் ஹாஷ்டல்ல தங்கிப் படிச்சா.. துருதுருன்னு இருப்பா.. அவள பார்த்தவுடனே பிடிச்சிருச்சுனு பொய்லாம் சொல்ல மாட்டேன்.. ஆனா அவளோட குறும்புத் தனம் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு.. அவகிட்ட பேசனும்னு நானும் எவ்ளோ ஆசப்படுவேன்.. ஆனா எங்க தப்பா நினைச்சிக்குவானு பயந்திட்டேன்..அதில்லாம ஒரு பொண்ணுக்கிட்ட அவ விருப்பத்த தெரிஞ்சுக்காம புரோபோஸ் பண்றதுல விருப்பம் இல்ல.. அன்னைக்கு வேலன்டைன்ஸ் டே என்னிக்கும் போல நானும் அவ ஹாஸ்டல் முன்னாடி நின்னுட்டு இருந்தேன்.. அவ அன்னைக்கு என்கிட்ட வந்து அவளாவே விரும்புறனு சொன்னா.. என்னால நம்ப முடியல.. இந்த உலகத்துல ரொம்ப சந்தோசமா என்ன மாறி யாரும் இருந்திருக்க முடியாது. நாங்க அவ்ளோ சந்தோசமா வாழ்க்கைய அனுபவிச்சோம்.. நான் அதுவரைக்கும் அனுபவிக்காத தாய்ப் பாசத்த அந்த கொஞ்ச நாள்லயே எனக்குத் தந்தா.. ஆனா அது எனக்கு முழுசா கிடைக்க நான் கொடுத்து வைக்கல .. அதான் " அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அர்ஜுனின் மனநிலையை புரிந்வனாக அவன் தோளினைத் தட்டிக் கொடுத்தான்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora