பாகம் 16

6.6K 242 90
                                    

மகதியின் ஊரான தஞ்சாவூருக்கு கார் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது..

அர்ஜூன் உயிரோடு இருக்கும் போது எதற்கு அவன் பொய் சொல்ல வேண்டும்.. சுஜியை பிடிக்கவில்லையா.. அல்லது வேறு எதாவது காரணமா.. ஒருவேளை இவன் உயிரோடு இருப்பது தெரிந்தால் சுஜி நிலைமை என்ன..அர்ஜுன் நல்லவனாக இருந்தால் தன்னை உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை சோகத்தில் தவிக்கவிட எவ்வாறு நினைத்திருப்பான்..
அல்லது உண்மை தெரிந்து சுஜி இவனை ஏற்றுக் கொண்டால் கிருஷின் கதி என்னாகுமோ..
இது போன்ற பல கேள்விகளை தன்னுள் கேட்டுக் கொண்டே காரைச் செலுத்தினான் பாலா..

மகதியின் நிலையோ வேறொறு எண்ணத்தில் இருந்தது....திருமணத்தி்ற்கு பயந்து வேலை செய்ய வேண்டும் என காரணம் கூறி ஊரை விட்டு வரும் போது நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது..

தான் ஊருக்கு கிளம்புவதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்த தன் தாயை வம்பிழுத்து திட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தாள்..

மகதி பார்த்து போய்ட்டு வாமா.. அப்பா உன் மேல இருக்கற நம்பிக்கைல தான் அனுப்பறாங்க.. பாத்து நடந்துக்கோ " என அக்கரையாக சொன்ன பருவிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

"நீ கவலையே படாத பருவதம்.. வரப்போ உனக்காக அழகான மருமகன கையோட கூட்டிட்டு வரேன்..நீ வந்த உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடு.. சரியா.. "என்றாள் நக்கலாக..

அதை உண்மையென நம்பி்" வருவ

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அதை உண்மையென நம்பி்"
வருவ.. வருவ.. அப்படி வந்து மட்டும் பாரு தலையில இருந்து கால் வரைக்கும் விளக்குமாறாலயே பூஜை பண்ண வேண்டி இருக்கும்". என கோவமாக சொன்ன தாயிடம்
" பரு அதைப்பத்தி நீ கவலப்படாத.. .. அதெல்லாம் எனக்கு பழகிடுச்சு " என பழிப்புக் காட்டி விட்டு பஸ் ஏறினாள்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now