பாகம் 48

5.6K 198 63
                                    

பாலா வீட்டை விட்டு வெளிய வந்தான் ..

மகதி நான் போய்ட்டு வரேன்..

நீங்க போகக் கூடாது..

ஏன்

ஏன்னா ஏன்.. அது அது உங்க ஊர்ல மழையாம்.. அத்தை உங்கள லேட்டா வர சொன்னாங்க..

" நிஜமா "என்று நம்பாத மாறி கேட்கவும்

' மரமண்டை.. ' " ஆமாம்.. வேணும்னா அத்தைகிட்ட கேளுங்க "

அவன் போனை எடுக்கவும்..' ஐயோ அவர போன் பேசாம பண்ணுடி '

" அதானே என்னையெல்லாம் எங்க நம்ப போறீங்க.. நல்லா செக் பண்ணுங்க" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்..

"மகதி"

" பேசாதீங்க "

" மகதி "

' இப்படியே கண்டினுயூ பண்ணுடி .. நம்பற மாறி தான் தெரியுது ' " சரி சரி.. உள்ள போலாம் வாங்க " என்று உள்ளே செல்ல போனாள்..

" மகதி " அவன் உணர்ச்சியற்ற குரலில் கூறவும் " இப்ப என்ன போகனுமா?..போங்க.. டைம் ஆயிடப் போகுது " என்றாள் கோபமாக..

அவன் பேசாமல் அமைதியாக இருக்கவும் " ம் ம் சொல்லுங்க " என்றாள்..

" ஓய்..இங்கப் பாரு.. நீ இங்க இருனு சொன்னா இருக்கப் போறேன்.. அதுக்கு எதுக்கு இந்த பொய் கோபமெல்லாம் " என்று சிரித்துக் கொண்டே கூறினான்..

' மகதி இப்பவும் மொக்கை வாங்கிட்டியே.. இது என்னை மொகறக்கட்டையோ ஒரு எக்ஸ்பிரசனும் புரிய மாட்டிங்குது.. சரி சரி எப்பவும் போல சிரிச்சே சமாளிப்போம்.. ' என்று நினைத்துக் கொண்டு

" சாரி " என்றாள்..

" உன்னையெலாம் வாய் இல்லைனா நாய் கூட மதிக்காது .. உள்ள போ "

நீங்களும் வாங்க..

இல்லடா.. நான் நாளைக்கு மார்னிங்கே அங்க இருக்கனும் .. இன்னும் ஒன் மன்த் தான மேரேஜ்கு இருக்கு அப்போ பேசிக்கலாம்

அவன் அவ்வாறு சொல்லவும் மகதியின் முகம் வாடியது..

" சரி பார்த்துப் போங்க.. " என்றாள் சோகமாக

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now