பாகம் 54

7.6K 217 143
                                    

மகதியிடமிருந்து விடைபெற்ற பாலா மாணிக்கத்திடம் வந்து " மாமா மகதிய பார்த்துக்கோங்க.. நான் ஊருக்கு கிளம்பறேன் " என்றான். " மாப்பிள்ளை எனக்கும் ஜானகிய பார்க்கனும் போல இருக்கு.. நானும் வரேன் " என்றதும் அவனும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவரை அழைத்துச் சென்றான்.

ஐசியுவிற்கு வெளியே கிருஷ், சுஜி . ஜோசப், ஜானகியின் கணவர் நாக ரத்தினவேல் ஆகியோர் காத்திருந்தனர்.. ஆனால் அவனது கண்கள் இந்திராவைத் தான் தேடின..

"அப்பா, அம்மா எங்கே " என்றான் தழுதழுத்த குரலில்.. அங்கே யாரும் பேசும் நிலையில் இல்லை.. கிருஷ் அவனைக் கண்டதும் " அண்ணா என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பேச்சைக் கேட்டு ஜானகியம்மாவ நல்லபடியா கவனிச்சிருந்தா இப்படி ஆயிருக்காது " என அவனைக் கட்டிக் கொண்டு அழுதான்..

பாலாவும் அவனை சமாதனப்படுத்தும்
விதத்தில் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான். ஆனால் அப்போது வெளியே வந்த டாக்டர் " மிஸஸ். இந்திராக்கு சிவியர் அட்டேக் வந்திருக்கு.. ரொம்ப கிரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்காங்க.. டாக்டர் பாலா நீங்க வந்து பேசன்ட பாருங்க "என்று கூறுனார்..

அவனது இதயம் படபடத்தது.. எந்த நிலைமை வரக்கூடாது என்று இவ்வளவு நாள் பாடுபட்டானோ அது அனைத்தும் வீணாகிப் போனதை எண்ணி மனம் நொந்தான்.. அவன் இருக்கும் சூழ்நிலையில் தனது தாயிற்கு சிகிச்சை அளிக்க முடியாது தான்.. ஆனால் இப்போதைக்கு வேறு வழியுமில்லை..
ஐசியுவிற்குள் செல்லுமுன்பு ஜானகியம்மாக்கு என்னாச்சு என்று கேட்டான்..

அதற்கு சுஜி தான் " விசத்த முறியடிச்சாச்சு.. ஆனா அந்த மருந்தோட தாக்கத்துனால கோமாக்குப் போயிட்டாங்க " என்றாள் விசும்பலுடன்..

நடந்ததை இனி யாராலும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்த பாலா கனத்த இதயத்துடன் ஆப்பரேசன் தியேட்டருக்குச் சென்றான்..
அனைவருக்கும் கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை..

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அறுவைசிகிச்சை முடித்துவிட்டு வெளியே வந்த பாலாவின் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளிவட்டம் தெரிந்தது..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now