கையில் மலர்க்கொத்துடன் உள்ளே நுழைந்த சுஜி, வாசலில் நின்ற இந்திராவிடம் " என்ன மாமியாரே.. எங்க உங்க தூங்கு மூஞ்சிப் பையன்.. என்ன கூட்டிட்டு வரத விடு சாருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை " என வந்ததும் பொறிந்து தள்ளினாள்..
" சரி சரி உள்ள வா.. அவன அப்ரோமா ரெண்டு பேரும் சேர்ந்து திட்டிக்கலாம்.. இப்ப உள்ள போயி பாலாவ விஷ் பண்ணு " என்றார் இந்திரா
சுஜியைப் பாரத்தவுடனே அவளருகில் வந்தான் பாலா..
" மாமா சூப்பரா இருக்கிங்க " என்று சொல்லி முடிப்பதற்குள் " நான் உங்கிட்ட முக்கியமான விசயம் பேசனும் வா " என்று அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்து செல்ல எத்தனித்தான்..
ஆனால் அதற்குள் மாணிக்கம் " பாலா.. இந்தப் பொண்ணு தா சின்ன மருமகளா.. முன்னாடியே வந்திருந்தா அர்ஜூனோட சேர்த்து கிருஷ் தம்பிக்கும் நிச்சயத்த வெச்சிருக்கலாம் " என்றார்..
சுஜி அவரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு " ஐயா நீங்க மகதியோட அப்பா தான.. அப்ப எனக்கும் அப்பா முறைதான்.. ம்ம்.. ஓகே அப்பா. அது யாரு அர்ஜூன் " என்றாள்.. அவள் என்னமோ எதார்த்தமாக தான் கேட்டாள்.. ஆனால் பாலாவுக்குத் தான் பெரியதாக தெரிந்தது..
" ஓ அதுவா.. அவன் என்னோட மச்சான் பையன் மா.. வா உன்னை அவனுக்கு அறிமுகம் படுத்தி வைக்கிறேன் " என்று அழைத்து சென்று வி்ட்டார்.
பாலாவும் இனி தன்னால் நடப்பதை எதையும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தான்..
" அர்ஜூன்.. இந்தப் பொண்ணுதான் கிருஷ கட்டிக்கப் போறா.. " என்று பின்புறம் திரும்பி தனது சுஜியுடன பேசிக் கொண்டிருந்த அர்ஜூனின் தோள் தொட்டு திருப்பினார்..
அரஜூன் புன்னகை மாறாமல் திரும்ப சுஜியோ அவனைப் பார்த்த அந்த நொடி உலகமே ஸ்தம்பித்ததை போல உணர்ந்தாள்..சுத்தியலால் யாரோ தலையில் அடித்ததை போன்று உணர அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்..
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..