ஜானகி கோபமாக பேசவும் ரோகித் கிருஷிற்கு போன் பேசவும் சரியாக இருந்தது..
ஜானகி ரொம்ப டென்சனாகி பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டார்..
இரத்தினம் அவரை சமாதனம் பண்ண நகரவும் சுஜி அவரின் கைப்பிடித்து தடுத்துவிட்டாள்..
போன் பேசும் போது கிருஷ் முகம் மாறிக் கொண்டே சென்றது.. சிறிது நேரத்தில் அவனே தட்டில் சாதத்தை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்று அமர்ந்தான்..
ஜானகியால் கிருஷின் மீது தொடர்ந்து கோபமாக இருக்க முடியாதே .. அவன் அருகே வரவும் நார்மல் ஆனார்..இந்தாங்க என்று தட்டைக் கொடுத்தான்..
அவர் வாங்கி வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து இருந்தார்.." ஏன் எனக்கு ஊட்டி விடுங்கனு தனியா சொல்லனுமா " என்றான் வானத்தைப் பார்த்தபடி..
அவன் அவ்வாறு சொல்லவும் கண்களில் கண்ணீரோடும் உதட்டினில் சிறு புன்னகையோடும் அவனுக்கு ஊட்டி விட்டார்..அவனும் அவருக்கு ஊட்டிவிட்டான்

சுஜியோ " மாமா இவுங்க சாப்பிடரதப் பார்த்தா நமக்கு எதும் மிஞ்சாது போல வாங்க நாமபோய் சாப்பிடலாம் " என்று உள்ளே சென்று சாப்பிட ஆரம்பித்தாள்..
" என்னை தனியா கலட்டி விட்டிங்கல்ல அத்தை ...நல்லாக் கொஞ்சிக்கோங்க.. நீங்க ரெண்டு பேரும் கடைசில எங்கிட்ட தான் வந்தாகனும் .. அப்ரோம் பார்த்துக்கிறேன் உங்களை " என்றவாரே சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்த பிளானுக்குத் தயாரானாள்..
நாகுவும் சுஜியும் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தனர்.. கிருஷ் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்..
" மாமா இன்னும் ரெண்டு ஸ்டெப்புல தோக்கப் போறீங்களே " என்று அவள் பழிப்புக்காட்ட
" நீ எதோ சீட் பண்ணி விளையாடற மாறி இருக்கே " என்றார் நாகு
' சுஜி உண்மையாவே இதில் சீட் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்த கிருஷ் தந்தைக்குப் பதிலாக களத்தில் இறங்கினார்..
VOUS LISEZ
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Fiction généraleHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..