பாகம் 45

5.8K 200 78
                                    

கிருஷைப் பார்த்தவுடன் அவர் சிலையாக அப்படியே நின்றார்..இரத்தினம் அவரை தொடவும் சுயநினைவை அடைந்த ஜானகி அழுதுகொண்டே அவர் அறைக்குச் சென்று கதவினை சாத்திக்
கொண்டார்..

கிருஷிற்கு அவரது செயல் கோபத்தினைத் தந்தாலும் பாலாவினது அறிவுரையால் முயன்ற அளவு தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்..

" கிருஷ் அவள தப்பாப் புரிஞ்சிக்காதப்பா.. " என்றார்  இரத்தினம் தயங்கியபடி...

அவரையும் முறைத்தபடி " அவுங்க தான் அப்படி நடந்துகிட்டாங்கன்னா உங்களுக்கு கூடவா இது தப்புனு தோனலயா..அர்ஜூனப் பார்க்க கொஞ்சம் கூட பாவமா தெரிலைனா கூட பரவால.. பெத்த மகன் என்மேல கூட பாசமே இல்லையா "என்றான் கிருஷ்..

அவரிடம் வார்த்தை வர மறுக்க அவரை ஏளனமாக பார்த்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தான்..

மெல்ல தயங்கியபடி " எனக்கும் இப்ப தான் தெரியும்பா.. ஆனால் ஜானகி இருக்கற நிலைமைல அவளது தாண்டி என்னால எதும் செய்ய முடியலப்பா "என்றார் ...

" ஓகோ.... சரி உங்கள்  மனைவிக்கு இப்ப என்னவாம்.. என்னப் பார்த்தவுடன் உள்ள போய்ட்டாங்க... "

" எனக்குத் தெரியும்பா நீ அவ மேல செமக் கோபமா இருக்கனு...நீ அவளப் பத்தி தெரிஞ்சிக்க என்னோட வா.. " என்று அவனைக் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றார் ..

அது ஒரு பிரம்மாண்டமான அறை.. அதில் கிருஷின்  சிறு வயது புகைப் படத்திலிருந்து தற்போது சுஜியுடனான கடைசிப் பயணம் வரை என அனைத்தும் இருந்தது..
அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் அதனை வெளிக்காட்டாதவாறு
" இந்தப் போட்டாவ எல்லாம் எடுத்து வெச்சா அர்ஜூனுக்கு நீங்க பண்ண துரோகம் போயிருமா " என்றான் கோபமாக...

மனைவியின் செய்கைக்கு  அர்ஜூன் பிறந்ததிலிருந்து தான் முழுதும் மாறியதாக கருதி அவளை மேலும் வற்புறுத்தாமல் இருக்க அர்ஜுனிற்கும் ஜானகிக்கும் கடைசி வரை வராமல் இருந்த தனது முட்டாள்த் தனத்தைக் காலம் கடந்தபின்பு உணர்ந்து வருந்தினார் இரத்தினம்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora