பாலாவின் வருகையை மகதி சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அவனது வரவே அவளுக்கு சிறந்த பரிசு போன்று இருந்தது..
மகதி கேக்கை கட் பண்ணி முதலில் யாருக்கு ஊட்டுவது என்று யோசித்தாள்.. அனைவரும் அவளை ஆர்வமாகப் பார்க்க மகதியோ பெரிய பீசாக கட் பண்ணி தானே சாப்பிட ஆரம்பித்தாள்..
" மதிம்மா.. இன்னைக்கு உனக்கு தான் பொறந்தநாள்.. அதுக்காக நீயே எல்லாத்தையும் சாப்பிடாத என்று கூறி அருகில் வந்தான்..
அப்பாலேப் போ சாத்தானே.. என் கேக் எனக்கு மட்டுமே.. நானே மதியத்துல இருந்து பட்டினியா இருக்கேன்.. என்னை யாரும் சாப்பிடவே கூப்பிடல.. ஆனா இதுக்கு மட்டும் பங்குக்கு வந்திடுவீங்க..
இது அவர் எனக்காக மொத மொத வாங்கிக் கொடுத்தது.. நான் மட்டும் தான் சாப்பிடுவேன்.." என்று சொல்லிக் கொண்டே முழுதும் சாப்பிட ஆரம்பித்தாள்..
"ஏன்டீ மாப்பிள்ளை எவ்ளோ மெனக்கெட்டு உனக்காக வந்திருக்காரு.. அதக்கூட " என பரு ஆரம்பிக்கும் போதே " அத்தை . பாவம் பல நாள் பட்டினி போல 😀 சாப்பிடட்டும் விடுங்க.. " என்று பாலா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்..
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..