ஹேய் பேபி இங்க என்ன பண்ற..,,என்றான் ஆச்சர்யமாக,
' ஒரு வேளை நான் பேசுனது கேட்டுருக்குமோ..பரவால சமாளி " என நினைத்துக் கொண்டவள் மகதி '
"சார் என் பிரண்ட் கீதாவா பார்க்க வந்தேன்.. நீங்க.. எதுக்கு வந்தீங்க.. என்றாள் ஆழம் பார்க்கும் விதமாக..ஓ.. நானா.. என் கேர்ள் பிரண்ட் ஒருத்தி பிரக்னன்ட இருக்கா..அவளோட ரிப்போர்ட வாங்க வந்தேன்.. என்றான் குறும்பாக..
' அடச்சீ இவங்கிட்ட போய் இவ்ளோ நேரம் பேசினோம் பாரு ' என்று தன்னையே அருவறுப்பாக எண்ணிக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..
' நான் கேர்ள் பிரண்டுனு தான சொன்னேன்.. என்னமோ அதற்கு நான் தான் காரணங்கிற மாறி அந்த ஓட்டம் ஓடுற.. கிரேசி கேர்ள் ' என நினைத்துக் கொண்டு அவன் வேலையை பார்க்கச் சென்றான் கிருஷ்..
அடுத்த நாள்.....ஞாயிறு என்பதால் மகதி, அனு மற்றும் கீதா மூவரும் சென்னையை அலசி ஆராய்ந்து தங்களுக்குத் தேவையான உடமைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர்..
ஹலோ கேர்ள்ஸ் இங்கயும் என்னை ஃபாலோ பண்ணி வந்திட்டிங்களா.. உங்க தொல்லை தாங்கலப்பா.. எதுக்கு தான் ஆண்டவன் என்னை இவ்ளோ அழகா படைச்சானோ.. என்று சளித்துக் கொண்டான் ரோகித்..
"அத நாங்க சொல்லனும் . .. ஒரு நாள் கூட உன் தொல்லை இல்லாம்மா இருக்கலாம்னா வி்ட்றியா " என தலையில் அடித்துக் கொண்டாள் கீதா..
அவள் விளையாட்டாக சொன்னாலும் அவன் முகம் வாடிப் போனது.." ஏன் கீதா நான் உனக்கு தொல்லையா.." என பாவமாக கீதாவின் கையைப் பிடித்துக் கேட்டான்....ரோகித்..
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..