பாகம் 15

6.6K 239 111
                                    

கிருஷ் இப்பதான் அவ மனச ஓரளவுக்கு மாத்துனான்.. ஆனா நீ இப்ப சொன்ன ஒரு வார்த்தைல மறுபடியும் பழையபடியே சொல்லிட்டு போய்ட்டா.. இப்ப உனக்கு சந்தோசமா என அவன் கத்த,
அதுவரை அவன் பேசுவதை அமைதியாக கன்னத்தில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்த மகதி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்..

" நா நா நா முன்னாடி உள்ள வந்தப்ப கிகிகிருஷ் சார் தான் அந்தப் பொண்ண திட்டிக்கிட்டு இருந்தார்.. நா ம்ம்ம் நினைச்சேன் அந்த பொண்ணுதான் இவர லவ்வ் பண்றானு.. ஆனால் இப்படி இருக்கும்னு நினைக்கல.. நான் உண்மையிலே லூசுதான்.. அதான் புரியாம தப்பு பண்ணிட்டேன்.. ம்ம் ம்.
நான் வேணா அந்த பொண்ணு கால விழுந்தாவது சமாதானப் படுத்தறேன்.. ப்ளீஸ் ம்ம் ம் "...என
கண்ணீரை துடைத்துக் கொண்டே சொல்லி முடித்தாள்.

பாலாவுக்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது...

" சாரி மகதி நா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அடிச்டேன்.. நீ ஃபீல் பண்ணாத. அவ இத்தனை  நாள் நாங்க சொன்னதையே கேக்கல.. நீ சொன்னதுக்காகலாம் அவ அந்த முடிவு எடுக்கல.. புரியுதா.. போ வேலைய பாரு " என்று அவள் முகத்தைக்கூட பார்க்காமல் திரும்பி நின்று பதிலளித்தான்..

இந்த தடவை சுஜி கண்டிப்பாக என்னையும் என் காதலையும் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவனது வேலையை அரைகுறையாக செய்துவிட்டு ஆர்வமாக உள்ளே நுழைந்தான்..கிருஷ்..

அங்கே சுஜி இல்லாதது அவனுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது..அவனது முகவாட்டத்தை பார்த்த மகதிக்கு அதற்கு நான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் தன்னையே நொந்து கொண்டாள்..

பாலாவோ எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும் தன் செல்ல தம்பி இந்த பாழாய்ப் போன காதலால் அவன் படும் அவஸ்தையை தன்னால் சரிசெய்ய முடியவில்லையே என எண்ணி கண் கலங்க நின்று கொண்டிருந்தான்..

" அண்ணா அம்மு எங்க  " என்றான் நெஞ்சில் வலியோடு..

பாலா அவனிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now