பாகம் 53

5.7K 199 86
                                    

ஆடையில் தீப்பற்ற பதறிய மகதி "அம்மா " என்று கத்தினாள்.. மாணிக்கம் அவள் குரல் கேட்டு ஓடிவந்து நெருப்பை அணைத்தார்..
பயத்தில் தனது தந்தையின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்..

" என்னங்க இது சரிப்படாது.. பசங்க விரும்பனாங்கனு தான் ஜாதகம் எதும் பார்க்காம கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டோம்.. இப்ப புதுப்புடவைல தீப்பட்டு " என முடிக்கும் முன்பே " எதும் சொல்லாத.. நான் நம்ப ஜோசியர பார்த்துட்டு வரேன் " என்றார் மாணிக்கம்..

பாலா சென்று 4 மணி நேரமாகியும் இன்னும் வராததால் பயத்திலிருந்தாள் மகதி.. வெளியே சென்ற மாணிக்கம் பருவதத்தைத் தனியாக அழைத்து " மகதிக்கு நேரம் சரியில்லயாம்.. மகதிக்கு பாலாவோட கல்யாணம் பண்ணா ரெண்டு உயிருக்கும் ஆபத்து
வரலாம்னு சொன்னார்.. இந்துக்கிட்ட இதைப்பத்தி பேசனும் " என்று கவலையாகக் கூறினார்.

மகதி இதைக் கேட்டும் அமைதியாக இருந்தாள்..இரவு ஏழு மணிக்கு களைப்புடன் மாலதியோடு வந்து சேர்ந்தான் பாலா.. ரோகித் தயங்கியவாரே மருதுவைப் பற்றியும் அவரது கண்டிசனையும் கூறினான்..
மாணிக்கத்திற்கு தனது மகளைப் பற்றி கவலையாக  இருந்தாலும் ஜானகிக்கு சிகிச்சை நல்லவிதமாக நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டதும் மிகவும் சந்தோசப்பட்டார்.. ஜாதக விசயத்தால் இருந்த கவலையும் தீர்ந்தது.. இருப்பினும் பாலாவை மருமகனாக்க முடியவில்லையே என வாய்விட்டே  புலம்பினார்..

வந்ததிலிருந்து பாலா குனிந்த தலையை நிமிரவேயில்லை.. 

தன்னருகே மகதி வந்து காபியை நீட்டவும் தான் நிமிர்ந்து பார்த்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தன்னருகே மகதி வந்து காபியை நீட்டவும் தான் நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. " காலைல இருந்து நீங்க எதுமே சாப்பிடல இந்தாங்க " என்று நீட்டினாள்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now