பாகம் 36

5.9K 198 111
                                    

அர்ஜூன் சுஜியின் கையைப் பிடித்து உள்ளே கூட்டி வந்தான்..

மாணிக்கமும் பருவும் அவனை மகிழ்ச்சியுடன் பார்க்க மகதியோ ' எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டல.. மகனே நீ செத்த ' என்ற ரியாக்சன் கொடுத்துக் கொண்டு இருந்தாள்..

அர்ஜீனின் அப்பா, அவர்கள் இருவரையும் ஆசிர்வாதம் செய்தார்.. ஜானகியோ பேயறைந்ததை போல நின்று கொண்டிருந்தார். அவரது கன்னத்தில் யாரோ அறைந்ததற்கான கைத்தடம் தெறிந்திருந்தது..

ஆனால் இவையனைத்திற்கும் காரணமான பாலாவையும் அவனது உடன்பிறப்பையும் அங்கு காணவில்லை..

அர்ஜுனின் சுஜியை அவன் அனைவருக்கும் அறிமுகம் செய்து கொண்டிருந்தாலும் அவனது கண்கள் பாலாவைத் தான் தேடிக் கொண்டிருந்தன..
சிறிது நேரத்தில்
" மகதிம்மா.. அண்ணா எங்க " என்று வினவினான் அர்ஜூன்

அவனுக்கு பதிலளிக்க முடியாமல் தயங்கிய மகதி " உங்ககிட்ட  யாரும் பேசறதா இல்ல.. எங்கிட்ட சொல்லாம அவர்கிட்ட மட்டும் சொன்னிங்கள்ல.. இப்பவும் அவர்கிட்டயே சொல்லிக்கோங்க.. நான் போய் சுஜிகிட்ட போய் பேசறேன் " என்று சொன்னவுடன் நில்லாமல் தனது தாயுடன் பேசிக் கொண்டிருந்த சுஜிக்கு அருகில் சென்று நின்று கொண்டாள்..

அர்ஜூன் பாலாவினைத் தேடி மாடிக்குச் சென்றான்.. அங்கே

கிருஷ் நான் சொல்றத புரிஞ்சிக்கோடா.. - பாலா

நான் நல்லா புரிஞ்சிட்டேன்.. இனி அவளோட முகத்தில் நான் எப்படி முழிப்ப..நான் இருந்தும் இந்த நிச்சயத்த ஏன் நிறுத்தலன்னு கேப்பால..அதுக்கு நான் என்ன சொல்னும்னு சொல்லுங்க..

சுஜி எடுத்து சொன்னா புரிஞ்சிப்பாடா.. அவகிட்ட நானே பேசறேன்..அவ மனசில இப்ப நீ மட்டுந்தான்டா இருக்க..அதுக்குனு நீ எங்கள விட்டு போறேன்னு சொல்றியேடா..ப்ளீஷ் கிருஷ் நீயில்லைனா அம்மா வோட நிலைமைய நினைச்சுப் பார்த்தியா..

அதெல்லாம் நினைச்சுப்பார்த்து தான் சொல்றேன்.. நான் யாரோட அன்புக்கும் தகுதியானவ இல்ல.. இங்க நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் நான் மட்டும் தான் காரணம்.. நான் போனா எல்லா சரியாயிடும்..தயவுசெஞ்சு என்ன போக விடுங்க..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now