பாகம் 41..

6.2K 200 52
                                    

கிருஷ் சுஜியின் முகத்தை ஆராய்ந்து பார்த்தான்.. அதில் சிறு புன்னகை மட்டுமே இருந்தது..

மனதில் குழப்பத்துடன் இருந்த கிருஷை பாலாவின் குரல் கலைத்தது..
" டேய் சுஜிய அவுங்க வீட்ல விட்டுட்டு நம்ப வீட்டுக்கு போய்டு..  நாளைக்கு நாங்க வந்திடுவோம். சரியா " என்றான்..

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இருவரும் தங்களது பயணத்தைத் துவங்கினர்..

கிருஷ் அமைதியாக வர, சுஜி மெதுவாக பேச ஆரம்பித்தாள்..

" கிருஷ் சாரி என்னாலதான நீ இவ்ளோ கஷ்டத்த அனுபவிச்ச.. சாரிடா.."

சுஜி ப்ளீஸ் .. நடந்த எதுக்கும் நீ காரணமில்ல.. சொல்லப் போனா என்னால தான் உனக்கு பிரச்சனை . நான் மட்டும் இல்லைனா நீ அர்ஜு" இதற்கு மேல் அவன் தடுமாற..

சொல்லு கிருஷ் நான் அர்ஜூனோட இருந்திருப்பேன் அதானா.. உனக்கே இது காமெடியா இல்ல,.. நீயும் சரி அர்ஜுனும் சரி அவ்ளோ கஷ்டப்பட்டதுக்கு காரணம் என்னோட முட்டாள்தனம் தான்..

உன் அன்புக்கு நான் தகுதியானவளா கிருஷ்..என்னை மன்னிச்சு ஏத்துக்குவியா..என்று அழுது கொண்டே அவள் கேக்கவும் கிருஷ் ஸ்தம்பித்துப் போனான்..

"சுஜி" என்ற வார்த்தை மட்டுமே காற்றில் கரைந்து வந்தது..

சன்னல்புறமாக திரும்பிக் கொண்டு " ப்ளீஷ் கிருஷ்... நான் எப்ப உன்ன லவ் பண்றனு சொன்னனோ அப்பவே உன்னோட முழு அன்பை புரிஞ்சிட்டுதான் ஓகே சொன்னேன்.. ஆனா இப்ப உன்னோட காதலுக்கு எந்த தகுதியும் எங்கிட்ட இல்ல.. ஆனா என்னை வேனானு மட்டும் சொல்லிடாதடா.. என்னால இதுக்கு மேல எந்த வலியையும் தாங்க முடியாதுடா.. நீ எனக்கு வேணும் கிருஷ்"

அவன் இன்னும் அமைதியாகவே இருக்க " என் மேல இன்னும் உனக்கு நம்பிக்கையே இல்லையா.. இனி உன்னை தொந்த" என முடிப்பதற்குள்
" ஐ லவ் யூ சுஜி " என்றான்..

என் மேல உனக்கு கோபம் இல்லையே என்றாள் சந்தேகமாக..

அவன் வாய் மேல கைவைத்து அவளை தடுத்தவன் " உன் மேல நான் கோபப்பட்டா நான் கிருஷே கிடையாதுடி.. இனிமேல்  பழசப்பத்தி எதும் பேசாத சுஜி.. ப்ளீஸ் " என்றான் காதலோடு..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now