பாகம் 32

6.8K 216 74
                                    

பாலாவிடமிருந்து போனை வாங்கிப் பார்த்தான் அர்ஜூன் ...  அதில் கிருஷின் ஐந்து வயது குழந்தைப் படம் ஒளிர்ந்தது..  

" அண்ணா என்ன இது.. இப்ப எடுத்த போட்டோ கொடுங்க.. "

" அதான் நாளைக்கு வரப் போறான் .. அப்பவே பார்த்துக் கோ..இப்ப நமக்கு வெளில கொஞ்சம் வேலையிருக்கு வா.." எனும் போதே கிருஷிடமிருந்து கால் வந்தது..

" அண்ணா உங்களப் பார்க்கனும் போல இருக்கு.. மனசுக்கு எதோ தப்பா படுது.. நீங்க நல்லாருக்கிங்கல்ல " என்று எடுத்த எடுப்பிலே பதற்றத்துடன் கேட்ட கிருஷிடம் " என்ன சார் எதோ பாசமழை திடீர்னு ஒரேடியா அடிக்குது... அவ்ளோ பாசமிருக்கவன் எதுக்குடா ரெண்டு வருசம் வெளிநாடு போன.. " என்றான் ஏக கடுப்புடன்..

" என்ன அண்ணா நீங்க கூட புரிஞ்சிக்காம பேசறீங்க.. "

" என்ன அண்ணா காந்தினு.. உங்க லவ் செட்டாயிடுச்சுனு தான இப்ப கால் பண்ற.. போடா "

" டேய் அண்ணா நானும் ரொம்ப நேரமா உனக்கு மரியாத கொடுத்து  பேசிட்டு இருக்கேன்.. அப்ரோம் வந்தன்னா அவ்ளோ தான்.. நானாவது லவ்காக போனேன்.. ஸ்டடிஸ் காக  முழுசா ஏழு வருசம் எங்கள  விட்டு போனில்ல .. அதப்பத்தி நீ பேசக்கூடாது.. உங்கிட்ட பேசுனா என்னை உன்னோட பேசன்டா மாத்துனாலும் மாத்துவ... முதல்ல மகதி கிட்ட போன் கொடு.. "

" ஹலோ மிஷ்டர் கிருஷ் .. என்ன என்னோட வொய்ப பேரச் சொல்லி கூப்டுற.. மரியாதையா அண்ணினு கூப்டுற.. "

" சரி சரி அழுகாத.. எங்க அண்ணிக்கிட்ட கொடு..' நாமெலாம் வருசக் கணக்கா அழஞ்சு லவ்க்கு ஓகே வாங்குனா.. இவனெலாம் ஒரு மாசத்திலயே  நிச்சயத்துக்கு நாள் குறிச்டான் ' என தனக்குள்ளே புலம்பிக்   கொண்டான்..

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang