டேய் மச்சி என்னடா பண்ணிட்டு இருக்க.. அதுவும் ஒரு பொண்ணோட கையப் பிடிச்சிக் கிட்டு.. உன்னப் போய் நல்ல பையனு எங்க அம்மா உங்கோட சேர சொன்னாங்க பாரு.. என தலையில் அடித்துக் கொண்டான் ரோகித்..மானங்கெட்டவனே நீ தான்டா சொன்ன மகதி 'என்னால ரொம்ப ஹர்ட் ஆயிட்டா.. நீ போய் சமாதனம் பண்ணுனு '. இப்ப இப்படி கால வாரர..
அதுக்குனு பொம்பளப்புள கையப் பிடிச்சா பேசுவ.. அதுவும் விடாம..
டேய் லூசு .. அன்னைக்கே அம்மு மேல இருந்த கோவத்த அவ மேல காட்டிட்டேன்.. அதே தப்ப நேத்தும் பண்ணிட்டேன்.. அதும்ம்்ஃ்்
(அடுத்தவங்கனு சொன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு மகதி தன்னப் பார்த்து சொன்னதுல தெரிஞ்சுக் கிட்டேன் )இதுக்கும் இப்ப நான் உன்ன கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்..
இனி நீ இந்த மாறியே கேட்டுட்டு இரு.. உனக்கும் கீதாவுக்கும் மாத்தி மாத்தி டியுூடி போட்டுவிட்றேன்.
நீ பண்ணாலும் பண்ணுவ.. ஒரு லவ் பேர்ட்ஸ் சந்தோசமா இருந்தா சில ஆந்தைகளுக்கு பிடிக்காதே..
சரி சரி..முறைக்காத.. இடத்த காலி பண்றேன்.. போதுமா..மம்ம்
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
பாலாவின் பரிசம் பட்ட தன் கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் கேபினில் அமர்ந்தாள்..
வழக்கம் போல ஆிஸ் சந்தைக் கடை போலவே தெரிந்தது.. மணி 9.30 ஆகியும் சிலர் இன்னும் வராமலே இருந்தனர்..
' என்ன சார் இதான் நீங்க எனக்கு கொடுத்த வாக்கா ' என தன் கையைப் பார்த்துக் கேட்டாள் என்னமோ அவனிடமே பேசுவதைப் போல..
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..