இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரோகித் வந்து சேர்ந்தான்..
" ரோகித் சீக்கிரம் வந்து அவுங்கள செக் பண்ணு " என்று பதட்டமாக கூறினான்.. பாலா
அவனின் பதற்றம் கண்டு கோபம் கொண்ட ரோகித் " டேய் ஓவரா சீன் போடாத.. என்னால எல்லாம் அவுங்கள செக் பண்ண முடியாது.. நான் உன்னப் பார்க்க தான் வந்தேன் " என்று கோபமாக சொன்னான்..
" டேய் ஒரு டாக்டர் மாறியா பேசுற.. ப்ளீஷ்டா "
ஓஒ நீங்க வேணும்னா அநியாயத்துக்கு நல்லவங்களா இருந்துட்டு போங்க.. என்னை விட்ருங்க, பாலா இதைக் கேட்டு முறைக்கவும் " ஏண்டா அவுங்க அந்த சுஜிப் பொண்ணுக்கும் அர்ஜூனுக்கும் அவ்ளோ கெடுதல் பண்ணிருக்காங்க..எப்படிடா அதை உன்னால மறைக்க முடியுது.."
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு " நீ இந்தும்மாக்காக இதை செஞ்சுதான்டா ஆகனும் " என்றான் பாலா..
ரோகித் இதைக் கேட்காத மாறி அலட்சியம் செய்யவும் போனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு
" ஹலோ அங்கிள்.. நான் ரோகித் பிரண்ட் பாலா தான் பேசுறேன்..
அன்னைக்கு நான் உங்க கிட்ட பேசுனத மறந்திடுங்க.. ரோகித்க்கு இந்த கல்யாணத்துல அவ்வளவா விருப்பம் இல்ல..
கீதாக்கு வேற நல்ல பையனா பார்த்துக்கோங்க " என்றான் ..' அடப்பாவி.. நானே இப்பதான்டா கால்ல விழுந்து கல்யாணத்த்கு பர்மிசன் வாங்குனேன். அது உனக்கு பொறுக்கலயாடா .. கிராதகா ' என்று மனதில் பாலாவை அர்ச்சித்துக் கொண்டிருந்தான்..
பாலா அடுத்து வேறொரு நம்பருக்கு கால் செய்து " கீதா.. ரோகித் சரியில்லம்மா.. அவன் உனக்கு முன்னாடியே இன்னொரு " , இதற்கு மேல் விட்டால் தன் காதலையே பிரி்த்துவிடுவான் என்று உணர்ந்து அவன் மேலும் பேச முடியாதவாறு அவன் வாய் மேல் விரல் வைத்து
" போய்த் தொலையிறேன் " என்று கோபமாக சொன்னான்..
ESTÁS LEYENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficción GeneralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..