“ காதல் தோல்விக்கு
மரணம்
ஒருபோதும் முடிவு
கிடையாது...”பனியில் நனையும்
சிறுமலரைப் போல்...
உன் நினைவில்
நனைந்தேன்...
உயிரை தொலைத்தேன்..மழையில் கரையும்
மண்ணைப்போல்..
உன்னில் கரைந்தேனடா..ஜோகித்தை தான் முதலில் பார்த்ததில் இருந்து நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். "அன்று நான் அவனை பார்க்காமல் இருந்தால் என் மனம் இப்படி அலைப்பாயுமா என்ன..?
"அவன் தந்த இதழ் முத்தம் என் ஜோகியை மட்டுமே நினைவில் கொள்ள செய்து ஏன்..?
"அப்படியெனில் அவன் கூறியதுப் போல் ஜோகியாக இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அல்லவா..?
""ஆனால் ... , எப்படி ஜோகி இறந்துவிட்டான்... அவன் நினைவில் அவனது பெற்றோரும் அல்லவா வாடிக் கொண்டு இருக்கின்றனர். "
"எனக்காக ஆறுதல் தேடச் சென்றேன் ஆனால் அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்...?
"ஜோகி ஒரு வேளை உன்னைப் போல் ஒரு குட்டி ஜோகித் இருந்திருந்தா என்னோட வாழ்க்கை அவனுக்காக வாழ்ந்து இருப்பேன்.அதையும் தான் இந்த கடவுள் விட்டு வச்சாரா... என்கிட்ட இருந்து பிரிஞ்சுடீங்களே கடவுளே...
இப்படி என்னைய பாதில தவிக்க விட்டு போயிட்டியே ஜோகி"பட்டு உனக்கு என்னை மாறி பையன் வேணுமா இல்லை... உன்னை மாறி பொண்ணு வேணுமா..
" என்று ஆசையுடன் அன்று கேட்ட ஜோகியே அவள் மனதில் நின்றான்."எனக்கு எப்பவும் உன்னை மாதிரி குட்டி ஜோகி தான் வேனும்.. நான் இந்த உலகத்துக்கு வந்தப்ப இருந்த குட்டி ஜோகிய தூக்கி கொஞ்சனுமுன்னு ரொம்ப ஆசை டா...
""அப்படியா...
""அதான் போட்டே இருக்கே....
""இருக்கு ஆனா... அந்த குட்டி ஜோகிய என் கையால வாங்கற சந்தோஷம் வேனுமே ஜோகி..
என்று ரோகிணி ஆசையுடன் கூறினாள்
""அடப்போ ரோகிணி... நீ ரொம்ப மோசம்...
"
என்று ஜோகி சலித்தான்
