💜MTM-36💜

2.1K 90 16
                                    

"நானா எதுக்கு????"

"அது....."

"" இனியன் அண்ணா கூப்பிட்டு இருப்பாங்க""னு ஷாலு சொல்றா.... வர்ஷிக்கு எதோ வித்தியாசமா இருக்கு... ஏன் எல்லாரும் எதையோ மறைச்சி பேசறது போல பேசறாங்க... அப்படி என்ன நடக்குது இங்க???? நினைச்சிட்டு வெளிய வர்றா..... அப்போ அங்க வர்ஷி வீட்லயும், இனியன் வீட்லயும் சரியா தட்டை மாத்திக்கிட்டு பத்திரிக்கை படிக்கறாங்க... கல்யாணம் மஹீ-ஷாலு'க்கு குறிச்சது போலவே அடுத்த மாதம். அதிலயும் மஹீ- ஷாலுக்கு முன்னதாவே கல்யாண நாள்.. வர்ஷிக்கு ஒன்னுமே புரியல... ஏன் இப்படி???? இனியனை பார்க்கறா... அவனோ வர்ஷியை கண்டுக்க கூட இல்ல.... புடவை மாத்திட்டு வாங்க'னு சொல்லு அனுப்பறாங்க... எதோ சிலை மாதிரி வர்றா எல்லாம் பன்றா... இனியனை கூட பார்க்கல..... ஆனா புடவை மாத்திட்டு வந்த அப்பறத்திலிருந்து வர்ஷியையே பார்த்துட்டு இருக்கான் இனியன்....வர்ஷிக்கு எதும் புரியல... அவ எதையும் கவனிக்கவும் இல்ல.... என்னாச்சு???? ஒரே கேள்வி மட்டும் தான்..

இனியன் வீட்ல கிளம்பினதும், வர்ஷி வீட்லயும் கிளம்பிட்டாங்க... ஷாலு பேச வர்றா... ஆனா வர்ஷி கண்டுக்கவே இல்ல...

அதே போல இனியன் வீட்டுக்கு எல்லாரும் போறாங்க.... அங்க சாருக்கும் மதனுக்கும் நிச்சியம் முடிச்சி இனியன்-வர்ஷி கல்யாண நாள் அன்னைக்கே கல்யாணம்'னு முடிவு பண்றாங்க. வர்ஷி அமைதியா இருக்கா. பொம்மை போல...... யார்கிட்டயும் பேசவும் இல்ல... சண்டையும் போடல.... ஆனா அவளையே பார்த்துட்டு இருக்காங்க இனியனும், ஷாலுவும்...

வர்ஷி வீட்டுக்கு வந்த அப்பறம் யார்கிட்டயும் பேசல... அமைதியா இருக்கா... அப்படி என்ன எல்லாருக்கும் நா செஞ்சேன்??? ஏன் எதோ நா எனக்கு நிச்சயம்'னு தெரிஞ்சா எதோ கல்யாணத்தையே நிறுத்திடுவேன்'னு நினைச்சாங்களா??? என்கிட்டயே சொல்லாம ஏன் பண்ணணும்??? இனியன் கூட சொல்லலயே???? நேத்து அவ்ளோ வசனம் பேசுனான்... இடியட்... இவனோடா ஆன கல்யாண வாழ்க்கை நல்லா இருக்குமா??? இல்ல எப்போதும் சண்டையிலயே போகுமா??? யோசிச்சிட்டே அந்த நாள் போயிடுச்சு....

"ஹேய் வர்ஷி...ஏந்திரிடா... டைம் ஆச்சு...."

"ஹேய்............."

"வர்ஷி"

வர்ஷி முழிச்சி பார்க்கறா.... ஷாலு நல்லா நீட்டா கிளம்பி வந்து இருக்கா... அப்போ ஷாலு "பொம்பை போல உட்கார்ந்து இருக்க.... போடி... சீக்கிரம் கிளம்பி வா... "

"எங்க????"

"எங்கயா????"

"ஆமா.... எனக்கு எதுமே தெரில... நா அடுத்து என்ன பண்ணனும்????"

"ஹேய் வர்ஷி... என்னாச்சுடா???"

"பேசாத... எனக்கு உன்கூடயும் பேச பிடிக்கல"னு சொல்லிட்டு washroom போயிட்டா... ஷாலுக்கு அழுகையா வர்து... அவளுக்கு வர்ஷி light'a முகத்தை சுழிச்சாலே அழுகை வ்ந்துடும்.... அவ அழுதுட்டே வெளியே போயி தோட்டத்தில நிக்கற... "நா என்ன பண்ணேன்???? இவ என்மேல கோவ பட்றா...எனக்கே அன்னைக்கு ஊருக்கு கிளம்பும் போது தான் தெரியும் " அதை இங்க சொல்லிட்டு என்ன பண்ண????? என்னாச்சு மா??? கேட்டுகிட்டு ரொம்ப ஸ்டைலா நிக்கறது நம்ம இனியன். எங்கிருந்து தான் வந்துச்சோ ஷாலுக்கு கோவம்???

"எல்லாம் உங்களால தான்"

"............"

"நானும் வர்ஷியும் அதிகமா சண்டையே போட மாட்டோம். அப்படியே போட்டாலும் பேசமா இருக்க மாட்டோம்... ஆனா வர்ஷி இப்போ பேசாத'னு சொல்லிட்டா."

"நா என்ன பண்ணேன்???"

"நீங்க என்ன பண்ணல??????"

"சொல்லுமா.... தெரிஞ்சிக்கறேன்..."

"அவகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி தான் கூட்டிட்டு வரேன்'னு சொன்னீங்க...??"

"................."

"சொல்லுங்க அண்ணா???"

"அது..... சொல்லிக்கலாம்டா"

"அண்ணா அவ செம கோவத்தில இருக்கா... என்கிட்டயே பேச பிடிக்கல'னு சொல்லிட்டா"னு சொல்லி கண் கலங்கறா ஷாலு.

"ஹேய் ஷாலு அழாத.... அவளுக்கு பிடிச்சவங்ககிட்ட தான் அவ உரிமையா கோவ் படுவா.. ஆனா அந்த கோவம் கொஞ்ச நேரம் கூட நிக்காது.... அவளே வந்து பேசுவா பாரு... இதுக்கு போயி பச்ச புள்ள போல அழுவாங்களா????? "

"ம்ம்ம்.... என்னவோ.... வர்ஷியை சமாளிச்சி கூட்டிட்டு வாங்க அண்ணா" பாவமா சொல்லிட்டு இருக்க ஷாலுவை பார்த்த இனியனுக்கு ச்சே.... இவ தான் எவ்ளோ பாசமா இருக்கா வர்ஷி மேல.... என்ன மாதிரியான நட்பு இது???? அவளுக்காக இப்படி அழுவுறாளே??????

"நீ போ மா... நா கூட்டிட்டு வரேன்....." ஷாலு இனியனையே திரும்பி திரும்பி பார்த்துட்டே போறா....😎

மனமே மெல்ல திறWhere stories live. Discover now