12 மணி. உஷா என்ன dress பண்ணலாம் என்று யோசித்து கொண்டு இருக்க,
" உஷா, இத dress பண்ணு" என்று கையில் இருந்த பார்சலை கொடுத்தான் ஆதவன்.
" என்ன ஆதவா, இன்னம் surprises முடியல்லயா? ஏன் உங்களுக்கு வீண்சிரமம்?? "
" இதான் last suprise என்று வைத்துக் கொள். என்ன சிரமம்?? என் மனைவிக்கு நா செய்றது ரொம்ப ஆசையோட தானே. சரி பிரித்து பாரே " என்று சொல்ல,
உஷாவும் பிரித்துப் பார்த்தாள்.
Totally surprised.
மலேசியாவில் இருக்கும்போது இந்த சாரி ரொம்ப நல்லா இருக்கே என்று உஷா சொல்லிவிட்டு, price யை பார்க்க அதுவோ 20,000 என்று இருந்ததால் வேறொரு சாரியை சாதாரண விலைக்கு எடுத்துக் கொண்டாள்.
அவள் ஆசைப்பட்டதை அவளுக்கு தெரியாமலே வாங்கினான் ஆதவனும்.
" இவ்வளவு காசு கொடுத்து ஏன் ஆதவா????" என்று கேட்க,
" என் மனைவி என் முன்னால ஆசைப்பட்ட முதல் சாரி அல்லவா இது??? அதான் வாங்கிட்டேன்" என்று சொல்ல உஷாவின் கண்களும் கலங்கியது.
Wash எடுத்துவிட்ட வர, நேற்று போல் ஆதவன் இன்றும் உஷாவை அணிவித்தான்.பின்னர் கண்ணாடியின் முன்னால் இருந்து தன்னை அலங்கரித்துக் கொண்டு இருக்க, ஆதவன் அவளின் பின்னால் நெருங்கி வந்து,
கழுத்தில் அழகிய மாலையொன்றை மாட்டிவிட்டான். ஒரு heart இன்னொரு heart உடன் இணைந்து இருந்த அழகிய design இல் diamond மாலை அது. பின்னர் அவள் வலது தோளில் தன் நாடியை வைத்த ஆதவன், மாலை பிடித்தபடி,
" இதான் என் birthday gift" என்று சொல்ல அவளது காதோரம் ஆதவனின் வெப்ப மூச்சையும் முதன்முதலாக உணர்ந்தவள் சற்றே நெகிழவும் தொடங்கினாள்.
அந்த நேரம் பார்த்து உஷாவின் phone ரிங் ஆக வெட்கத்துடன் அவளும் ஓடினாள்.
பேசிவிட்டு வர, அன்று மலேசியாவில் உஷா select செய்த shirt யை அணிந்து ரெடியாகி இருந்தான் ஆதவன். இருவரும் மலேசியாவில் தங்களது குடும்பத்தினருக்கு வாங்கிய உடைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.Grandcity இன் முன்னே காரை Park செய்துவிட்டு இருவரும் மதிய உணவு உண்ண வந்தனர். உஷாவிற்கு பிடித்த Seafood fried rice யை ஓடர் செய்து இருவரும் நன்கு உண்டனர்.
பின் தன் தாயின் வீட்டினுள் நுழைய, இருவரையும் அன்புடன் வரவேற்றனர் உஷாவின் தாயும், தந்தையும். Sofa வில் அமர்ந்து இருந்த அத்தையையும், ஸ்னேஹாவை கண்டு இன்னும் மகிழ்ச்சியானது.
" என்ன உஷா, சாரி உடுக்க தெரியாதுன்னு கொஞ்ச நாள்ள எங்க கிட்ட சாரி கட்டிவிட சொன்ன, இப்போ எங்கள விட நல்ல கட்ரீயே. Saree கலர் உன் கலருக்கு suit ஆக இருக்கு. சாரி கட்டி இருக்கிறதும் செம்மையாக இருக்கு" என்று ஸ்னேஹா சொல்ல,
"ஆம் நானும் வந்ததுல இருந்து அத தான் பார்த்து கொண்டு இருக்கேன் " என்று உஷாவின் தாயும் சொல்ல,
ஆதவனை பார்த்தபடி,
" thanks, ரொம்ப புகழாதீங்க " என்று சிரித்தாள் உஷா.
இப்படி பேசிக் கொண்டிருக்க, உஷாவின் கண்களோ ஒரு நபரை வெகு நேரமாக தேடிக் கொண்டிருந்தது. அதனை கண்ட ஆதவன்,
"என்ன உஷா?? யார தேட்ற??" என்று கண்களால் கேட்க,
" ஒன்றுமில்லை" என்று அவளும் சொன்னாள்.

أنت تقرأ
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
عاطفيةஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...