பகுதி - 32
சரண் விசிறிய வார்த்தைகளின் கணம் தாளாமல் உயிரை குத்திக் குதறுவது போல் வலியை கொடுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் , தவறான பெண் என்ற நினைப்பில், அவன் பிறரோடு ஒப்பிட்டு பேசி.. துடிக்க வைக்கும் செயல்.. இந்த முறை பலமாக தாக்கிட.. வழியும் கண்ணீரை அவனுக்கு காட்ட விரும்பாதவளாய்.. அவனிடமிருந்து தன்னை பிய்த்தெறிந்து , கார் கதவை திறக்க முயல.. அதை திறக்கவும் முடியவில்லை .
கண்ணெதிரே, அவளுடைய போராட்டம்.. அதில் தென்பட்ட சிறு வீம்பு , என்று அவள் நிலையை பார்த்ததில்.. மேலும் ரசிக்கவே தோன்றியது . ஆனால் தாமரைக்கோ , ஏற்கனவே தங்கையின் உடல்நிலை அலைக்கழிக்க.. அதனோடு அவனுடைய பேச்சும்.. அதன் வீர்யமும் சேர்ந்து.. அழுகையை அதிகரிக்கவே செய்ய.. பிடிவாதமாக, அவன் முகம் காண மறுப்பவளாய்.. லாக்கில் கை வைத்தவாறே அமைதியாக இருந்தவளை.. சீண்ட வேண்டும் என்றே தோன்றியதில்...
" நான் லாக் ரிலீஸ் பண்ணாம.. அது திறக்காது..", என்றான் . அதற்கும் அவளிடத்தில் பதில் இல்லை. " நீ வாய் திறக்காம.. நான் திறக்க போறதும் இல்லை..", என்று அசால்ட்டாக கூறி அமர்ந்திருந்தான்.. மணி எட்டை எப்பொழுதோ கடந்து விட்டிருக்க.. மணமகளிடம் இருந்து அழைப்பே வந்துவிட்டது . அப்பெண் அழைக்கவுமே.. அழைப்பை ஏற்று.. " ஹலோ.. ஆங். நான் வந்துட்டேன் அக்கா.. அவனை ஒரு பார்வை பார்த்து மண்டபத்துக்கு நடந்து வாரேன்.. அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்.. ஆங் சரி.. நீங்க சாப்பிடுங்க.. ஆங்..", என்று கூறி வைத்தவள்..
" ஸார்.. நான் போகணும் போன் பண்ணீட்டாங்க.. ப்ளீஸ்..", என்று அவன் பேசியதையே மறந்தவளாக கெஞ்சத் துவங்கவே.. அவள் பக்கமாக தன் வலிய கரத்தை நீட்டவும்.. ஸீட்டோடு ஒண்டிக் கொண்டாள்.. அதை பார்த்தவனுக்கோ பிடிவாதம் அதிகரித்தவனாய்.. அவள் மீது உரசியவாறே.. கார் கதவை திறந்துவிட்டான். உடனே , அது திறந்துக் கொண்டதில்..
"நானும் இப்படிதே திறந்தேன்.. எனக்கு திறக்க காணும்.. இவிய திறந்துட்டாவ..", என்று வாய்விட்டு புலம்பி இறங்கியவளை..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...