வா.. வா.. என் அன்பே - 66

1.7K 36 19
                                    

பகுதி - 66

அவன் கூறியதை செய்து முடிக்க.. மயூரியின் , பின்னோடு சென்றவளை.. கரம் பிடித்து இழுத்திருந்தார் ஒரு பெண்மணி..

" நீ.. தாமரை‌ தான.. எங்க இங்க.. ஆளே மாறீட்ட..", என்று தன் வியப்பை மறைக்காமல் காட்டியவரை பார்த்ததும்.. பேயை கண்டவள் போல் அதிர்ந்து விழிக்க.. அவள் பின்னோடு வந்த சசிக்கும் , அப்பெண்மணியின் , பேச்சு காதில் விழவே செய்திருந்தது .

" யாரு அண்ணி.. ", என்று கேட்டவளாய் , அவளை நெருங்கி இருந்தாள்.. அண்ணி என்ற அழைப்பும்.. அழைத்தவள் உதய்யின் சகோதரி என்பதும் நன்கு தெரிந்தவராக அவர் இருக்கவே.. மறுமுறை , அவர் வாய் திறப்பதற்குள்ளாக..

" சசி.. நீ போ.. நா.. பின்னாடியே வரேன்..", என்று அவசர அவசரமாக அனுப்பியதில்.. தன் கண்களை சுருக்கி ஏறிட்டாலும் , அமைதியாக இருந்தார் .

அவள் அகன்ற பிறகே , " நீயா.. நீயா.. சரண் ஸாரோட செக்கென்ட் வைஃப்..", என்று தன் ஆச்சரியத்தை விலகாமலேயே.. கேட்டிட ,

துணிந்து ஆமாம் என்று சொல்வதற்கும் , தாமரைக்கு வாய் வந்திருக்கவில்லை . உள்ளுக்குள் , நொடிக்கு நொடி.. குறுகியவளாய்..

" ம்.. நீங்க எப்படி மேம் இருக்கீங்க.. சாந்தி அக்கா... நீங்க ஹைதராபாத்லேயே செட்டில்னு சொன்னாங்க..", என்று அவரை பற்றி விசாரித்தவளாக பேச்சை மாற்ற..

" ம்.. ஆமா தாமரை.. இப்ப நான் பயங்கர பிஸி.. ஹீரோக்கு , ஹீரோயின்ஸ்க்கு மதர்.. இல்ல மதரின் லா.. கேரக்டர்ல நடிக்கிறேன் . அதிகமா தெலுங்கு படத்தில வருது.. இப்ப கூட.. அந்த டைரக்டர் கே.கே.நிரோஷ்.. இருக்காருல்ல.. அவர் படத்தில முக்கியமான வில்லி கேரக்டர்.. ரொம்பவே பிஸி.. ", என்று அலட்டலாக , உயிர்ந்திருக்கும் அவருடைய நிலையை விவரித்தாலும்.. மயூரியின் தோழியான நடிகை ஷோபாவுடன் வந்ததாக கூறியிருந்தார் .

" உனக்கு தான் தெரியுமே.. என் பையனும் அமெரிக்காக்கு போயிடான்.. அதுனால.. ரொம்பவே நல்லா இருக்கேன்..", என்றவர் அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now