வா..வா.. என் அன்பே - 55

1.5K 45 23
                                    

பகுதி - 55

தன் சந்தேகத்தை தெளிவு செய்ய விரும்பியவனாக இருந்தாலும்.. மறைக்க முயன்ற ஆர்ப்பாட்டம்‌.. குரலில் தென்பட.. அவன் உணர்வுகளை உள் வாங்கியவளாக.. ,

" எனக்கு செத்த ( கொஞ்ச ) நேரம்..  நிம்மதியான தூக்கம் வேணும்.‌", என்று முனங்க.. தன்னவளின் கழுத்து வளைவில் முகம் புதைந்து தேடலை துவங்கி இருந்தான் .

அவளது வெற்றிடையில்.. மீட்கும் நாதமாய்.. அவன் விரல்கள் பயணிக்க.. அழுத்தமாக , விழிகளை மூடி உள்வாங்கியவள்..  மறந்தும்‌.‌. தன் இமைகளை பிரிக்கவில்லை ..

அவள் கழுத்தில் முகம் புதைத்தவன்.. அவன் இதழ்கள் , அந்த இடத்தில் அழுத்தமாக உரசியவாறே.‌.

" அதுக்கு நான் என்ன டீ பண்ணனும்..", என்று உல்லாசமாக கேட்டிட..  தன் நிலையில் , மாற்றம் இல்லாத போதும்.. சற்று பதற்றம் குறைந்தவளாக ,

" ம்.. தூங்க வைக்கணும்.. ", என்று  ரகசியமாக பதில் அளித்திருந்தாள்..

அதிகமான விஷமத்தையும் தனக்குள் தேக்கியவனாய்.. "எப்படி..", என்று கேட்டவுடன்.. பட்டென்று , விழிகளை திறந்து திருதிருத்தவளின் அழகில் மேலும் மயங்கியவன்... வாய்விட்டு நகைத்து.. முகமெங்கும் முத்திரை பதித்ததோடு அல்லாமல்.. மெதுமெதுவாக , அவன் உலகிற்கு அழைத்துச் செல்ல..  எப்பொழுதும் போல் அவன் வெளிப்படுத்தும் வேட்கையிலும்.. தேடலிலும்.. திணறி.. பயணித்து.. திண்டாடிப் போனாள் .

அவள் திணறல்களை அறிந்த பின்பும்.. தன் நிலையில் இருந்து மாற்றம் இல்லாதவனாய்.. கொள்ளைக் கொண்டிருந்தவன்.. ஒற்றை போர்வைக்குள்.. அவளையும் இழுத்துக் கொண்டு , தன் மேல் சாய்த்து தலைக் கோதவும்.. சூரியன் கிழக்கில் விழிக்க.. சுகமாய் பெண்ணவளின் விழிகள்.. ஆழ்ந்த உறக்கத்தில் மூடிக் கொண்டது .

ராம் வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் , மறந்தும் மயூரி வெளியே செல்ல மாட்டார் . அவர் வீட்டில் தங்குவதே , இன்றுவரை அறிதாக இருக்கையில்‌‌ வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வரை நண்பர்களோடும் வெளியே செல்வதையும் தவிர்த்து விடுவார்கள்.. எங்கும் செல்ல மாட்டார்கள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now