பகுதி - 55
தன் சந்தேகத்தை தெளிவு செய்ய விரும்பியவனாக இருந்தாலும்.. மறைக்க முயன்ற ஆர்ப்பாட்டம்.. குரலில் தென்பட.. அவன் உணர்வுகளை உள் வாங்கியவளாக.. ,
" எனக்கு செத்த ( கொஞ்ச ) நேரம்.. நிம்மதியான தூக்கம் வேணும்.", என்று முனங்க.. தன்னவளின் கழுத்து வளைவில் முகம் புதைந்து தேடலை துவங்கி இருந்தான் .
அவளது வெற்றிடையில்.. மீட்கும் நாதமாய்.. அவன் விரல்கள் பயணிக்க.. அழுத்தமாக , விழிகளை மூடி உள்வாங்கியவள்.. மறந்தும்.. தன் இமைகளை பிரிக்கவில்லை ..
அவள் கழுத்தில் முகம் புதைத்தவன்.. அவன் இதழ்கள் , அந்த இடத்தில் அழுத்தமாக உரசியவாறே..
" அதுக்கு நான் என்ன டீ பண்ணனும்..", என்று உல்லாசமாக கேட்டிட.. தன் நிலையில் , மாற்றம் இல்லாத போதும்.. சற்று பதற்றம் குறைந்தவளாக ,
" ம்.. தூங்க வைக்கணும்.. ", என்று ரகசியமாக பதில் அளித்திருந்தாள்..
அதிகமான விஷமத்தையும் தனக்குள் தேக்கியவனாய்.. "எப்படி..", என்று கேட்டவுடன்.. பட்டென்று , விழிகளை திறந்து திருதிருத்தவளின் அழகில் மேலும் மயங்கியவன்... வாய்விட்டு நகைத்து.. முகமெங்கும் முத்திரை பதித்ததோடு அல்லாமல்.. மெதுமெதுவாக , அவன் உலகிற்கு அழைத்துச் செல்ல.. எப்பொழுதும் போல் அவன் வெளிப்படுத்தும் வேட்கையிலும்.. தேடலிலும்.. திணறி.. பயணித்து.. திண்டாடிப் போனாள் .
அவள் திணறல்களை அறிந்த பின்பும்.. தன் நிலையில் இருந்து மாற்றம் இல்லாதவனாய்.. கொள்ளைக் கொண்டிருந்தவன்.. ஒற்றை போர்வைக்குள்.. அவளையும் இழுத்துக் கொண்டு , தன் மேல் சாய்த்து தலைக் கோதவும்.. சூரியன் கிழக்கில் விழிக்க.. சுகமாய் பெண்ணவளின் விழிகள்.. ஆழ்ந்த உறக்கத்தில் மூடிக் கொண்டது .
ராம் வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் , மறந்தும் மயூரி வெளியே செல்ல மாட்டார் . அவர் வீட்டில் தங்குவதே , இன்றுவரை அறிதாக இருக்கையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வரை நண்பர்களோடும் வெளியே செல்வதையும் தவிர்த்து விடுவார்கள்.. எங்கும் செல்ல மாட்டார்கள் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...