பகுதி - 102
சரண், அவளது இதழில் இதழை பதித்து ரசித்து சுகிக்க.. தாமரையின் , கரங்களோ அவள்.. கையில் வைத்து இருந்த ஆடையை நழுவவிட்டு இருந்தது .
கண்கள் சொருகியவனாய் , கன்னம் தாங்கி நின்றிருந்தவனின் மயக்கத்தில்.. பெண்ணவள் கர்வமாய் புன்னகை சிந்த.. ஆடவனின் மற்றொரு கரமோ , அள்ளி முடித்து வைத்திருந்த கூந்தலுக்கு விடுதலை அளிக்கும் முயற்சியில் முனைப்பாக இருக்க.. அள்ளி முடிந்திருந்த முடிக்குள் இருந்த பின்களையும் முத்தத்தை வழங்கியவனாகவே அகற்றியவனாய்.. தன் திறமையை காட்டிக் கொண்டிருந்தான் .
உச்சியில் இருந்த கூந்தலோ , கருப்பு அருவி போல் சரிந்து.. அவளது இடைக்கு சற்று மேல் வரை நீண்டு வளைந்து.. முதுகின் முழுப்பகுதியிலும் படர்ந்து இருக்க.. பின்னங் கழுத்தில் பட்டுப்போல் மென்மையாக படர்ந்திருந்த கூந்தலுக்குள் , ஐவிரல்களை நுழைத்து நெரித்தவன்.. அதில் தன் முகத்தை புதைத்து ஆழமாக மூச்சை இழுத்து நுகர்ந்தான் . அதன் நறுமணத்தை நுரையீரல் முழுவதும் நிரம்பிக் கொள்ள.. அவள் மீது இருந்த பித்து அதிகரித்ததாய்..
" அப்படி என்ன ஷேம்பு டீ.. நீ யூஸ் பண்ணுவ.. ", என்று மோகத்தின் பிடியால் கரகரப்பாய் கிசுகிசுத்து சரண் தன் சந்தேகத்தை கேட்டிட ,
" ஷாம்பு இல்ல.. பச்சை பயிறு.. செம்பருத்தி இலை..", என்று கிறங்கிய நிலையிலும் கவனமாக அவன் கேள்விக்கு, ஆசை மனைவியோ பதில் அளித்திருந்தாள்.
" ம்.. செம சாஃப்ட்.. அப்படியே..", என்று தன் ரகசிய பேச்சால் அவளை அதிர செய்ததில்..
" ச்சீ..", என்று வெட்கம் கொண்டு சிவந்து நின்றவள்.. பட்டென்று , விலகி.. அவசரமாக , அவள் கரத்தால் அவன் வாய் பொத்த.. பொங்கிய சிரிப்பை விழுங்கியவனாக ,
" உண்மையை தானே டீ சொன்னேன்..", என்று அப்பாவியாய் கூறியவனின் முரட்டு இதழ்களோ , ஒவ்வொரு விரலையும் எச்சில் செய்து.. குறுகுறுக்க செய்யவும்.. பட்டென்று எடுத்து..
" நீங்க ரொம்ப மோசம்..", என்று அவள் சிணுங்க..
" என்ன பாப்பா.. ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள மோசம்னு சொல்லீட்ட..", என்று விஷமமாக சிரித்து , மீண்டும் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்...
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...