பகுதி - 69
சாவித்திரியின் கூக்குரல் , நடந்து வந்துக் கொண்டிருந்த பெரியவர்களை ஈர்க்க..
" சாவித்திரி..", என்று அன்னப்பூரணி அழைக்கவும்..
" அம்மா.. இங்க பாருங்க.. ", என்று செய்தி தாளை பக்கத்திலும் தாமரை புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.அந்த வீட்டின் மூத்தவர் வியந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து.. சேனலை மாற்றிக் கொண்டே வர.. மிக பிரபலமான சேனலில் விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கவே , அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததும் வந்திருந்தது .
மாடியிலோ.. தாமரையின் அறையில் , " அண்ணி.. அ..ண்..ணி.. எழுந்திருங்க..", என்று சரணின் தங்கையான சசியோ.. அவளை உலுக்குக்கிக் கொண்டிருந்தாள் .
" ச..சீ... எ..ன்..ன.. என்னாச்சு.. ", என்று அவ்வளவு காலையில் அவள் முழித்திருப்பதிலேயே அதிர்ந்து.. பாட்டி. பாட்டி நல்லா இருக்காங்கல்ல..", என்று பதறி எழ..
" அய்யோ , அண்ணி.. நான் எதுக்கு எழுப்பீட்டு இருக்கேன்.. நீங்க எதுக்காக இப்படி பதறீட்டு எழுந்திருக்கீங்க..", என்று நெற்றியில் அடித்துக் கொள்ள.. என்னவென்று புரியாமல் முழுத்துக் கொண்டிருந்தவளை , முறைத்துக் கொண்டிருந்தாள் சசி .
சசியின் கோபம் எதனால் என்று புரியாமல் , " ஏன் கோபமா இருக்கீங்க.. நான் எதாவது தப்பு பண்ணீட்டேனா..", என்று சட்டென்று கலக்கம் சூழ்ந்தது போல் கேட்கவும்..
" அச்சோ.. அச்சோ..", என்று மீண்டுமாக நெற்றியில் அடித்துக் கொண்டு.. " நான் இப்ப.. நீங்க தப்பு பண்ணுனீங்கன்னா சொன்னேன்.. ஏன் , உங்க ஹஸ்பென்டோட சேர்ந்து எங்கிட்ட மறைச்சீங்கன்னு கேக்குறேன்.. ", என்று இடுப்பில் இரு பக்கங்களும் வைத்தவளாக கேட்டிட...
" மறைச்சுட்டேனா.. அவியலோட சேந்துகிட்டா.. நீங்க எதுவும் கனாகினா காணலையே.. கனா கண்டீகளா.. ", என்று புரியாமல் வினவியவளுக்கோ.. சசி எதேனும் கனவு கண்டிருப்பாளோ.. தூக்கத்தில் , உளறிக் கொண்டிருக்கிறாளோ என்று ஆராய்ந்தவளாய் அமர்ந்திருக்க..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...