ஹாய் நட்புகளே ,
எல்லோரும் எப்படி இருக்கீங்க.. மூன்று எபிக்களையும் இணைத்து.. ஒரே யூடியாக போட்டு இருக்கிறேன் . லாங் யூடி.. ஸோ , லேட் பண்ணீட்டேன்னு எப்பவும் போல என்னை புகழ்ந்துட்டே இல்லாம.. மறக்காம கமென்ட் பாக்ஸை ஃபுல் பண்ணுங்கப்பா.. 🤣🤣🤣🤣🤣
இப்படிக்கு
கனி தேவ் 💕💕💕
❇️❇️❇️❇️❇️❇️
பகுதி - 104
ஓய்வு எடுத்த வரை போதும் என்று எண்ணிய அக்னி பறவை.. இருட்டை விழுங்கி தன் பசியை ஆற்றிக் கொண்டு.. புவியவளுக்கு வெளிச்சம் கொடுத்து உதவி இருக்க.. கீழ் வானம் அழகாய் வெளுத்து பூமிக்கு விடியலை பறைச்சாற்றியது .
வெண்புகை சூழ , அழகு மலர்களின் படுக்கையில் படுத்து இருந்தவளை தீண்டிய , சுகமான காற்று.. அதில் நிரம்பி இருந்த நறுமணம் . அதனை ஆழ்ந்து அவள் நாசியால் உள்ளிழுக்க.. உடல் முழுவதும் பரவிய சுகத்தால்.. ஆராவின் அதரங்கள் அழகாய் விரிந்து மீண்டும் மலர் படுக்கையில் முகத்தை புதைத்து இருக்க..
" ஆரா..", என்று ஆண்மை நிறைந்த குரல் மென்மையாக , அவள் காதிற்குள் அழைக்கவும்.. விழிகளை திறவாமலேயே..
" கொஞ்ச நேரம்.. ", என்று அவள் சிணுங்க..
" ஆரா.. என்னை பாரு..", என்று ஆறடி ஆண் மகன் முகத்துடன் முகம் உரசியவனாய் , கிசுகிசுக்க.. முதல்முறையாக , உடலில் செல்களின் சிலிர்ப்பு ஏற்படவே , மெல்ல விழிகளை மலர்ந்தாள்.. வெண்புகையை தவிர வேறு ஒருவரும் தென்படவில்லை .
" யாரு.. யாரு என்னை அழைச்சது..", என்று தன்னைத் தானே சுற்றியவள்.. நாலா திசையிலும் பார்வையை சுழற்ற ஒருவரும் இல்லை.. இப்பொழுது அவளது கால்களோ , மலர்வனத்தில் நின்று இருந்தது.. ஆனாலும் , வசீகரனை காணும் ஆவல் பெறுக , மலர்களின் கூட்டத்திற்குள் ஓடினாள்..
" இங்க ஆரா..", என்று மீண்டும் மாயவனின் குரல் விண்ணில் வரை எதிரொளிக்க.. அவன் எங்கு இருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை .
ČTEŠ
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...