பகுதி - 88சரண் வீசிய சொற்கள், கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றியது போல், துடிதுடித்து போனாள் .
கணவனின் அருகாமையில் மெழுகாய் உருகவே நேற்றிரவு முதல் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது . ஆனால் , அறியாமல் செய்த செயலால் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு.. அதன் கணம் தாளாமலேயே , உண்மையை வெளிப்படுத்தி இருந்தாள் . ஆனால் , அதன் தாக்கம் எரிமலையின் குழம்பாய் , அவளை தாக்கும் என்று நினைத்திருக்கவே இல்லை .
வெளிறிய அவளது முகத்தை காண முடியாதவனாய் , இறுக்கமாக விழிமூடிக் கொண்டவனுக்கோ , ஆத்திரம் மட்டுமே உடல் முழுவதும் உஷ்ணத்தை அதிகரிக்க செய்திருந்ததில் , எப்பொழுதும் போலவே.. நிதானத்தை இழந்தவன்.. எப்பொழுதோ , அவளது ஒற்றை ஆடையை நீக்கி.. அவன் மட்டும் ஆடையாகி போயிருந்தில் , வலப்பக்கமாய் சரிந்தவன்.. அணுவணுவாய் , அவளது வெற்று உடலில் பாய்ந்த பார்வையில்.. அணு அளவிலும் காதல் கலக்காமல் , காமத்தை நிறைத்து மொய்த்தவனாக , சங்கு கழுத்தில் துவங்கிய.. அவனது விரல்களின் ஊர்வலம்.. ஆங்காங்கே , மிகுந்த அழுத்தத்துடன் பயணித்து.. வயிற்றுப் பகுதிக்கு வந்து இருக்க.. அதில் , மேலும் அழுத்தமாக கோலமிட்டவன்..
" பரவால்லை.. கொஞ்சம் தொப்பை போட்டு இருக்க.. ஆனா ..", என்று விரல்களும் இதழ்களும் மேலும் முன்னேறத் தொடங்கவும்..
" நிசமாலுமே.. நான் உங்களை.. உங்களை.. தூண்டினேன்னு சொல்றீகளா..", என்று இருவரின் உறவு நிலைக்கான தேடலை கேள்வியால் , துடிக்கும் இதழ்களை அடக்கியவளாக கேட்க..
முதலில் , அதீத வருத்தத்தால் மட்டுமே , வார்த்தைகளை சிதறடித்திருந்தான் . ஆனால் , நொடிக்குள் ஆதீக்கமாக ஆர்.பீ.எஸ்ஸின் குணம் மேலோங்கி இருந்ததில்.. ஆணவமாகவே , அவனது விரல்கள் பதிய.. புத்தியில் , தாமரையின் ஏக்கம் ஏற மறுத்திருக்க..
" இல்லையா..", என்றவன்.. அவளது கன்னத்தில் கட்டை விரலால் அழுத்தமாக தடவிட.. அவன் தீண்டலில் தன்மையை உணர முடியாதவள் இல்லையே.. அவ்வளவு எளிதாக , தன்னவனால் விலகி சென்றிட முடியாது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாலும்.. காதலால் அது நடைப் பெறவில்லை என்பதையும் புரிந்தவளுக்கோ.. இதயத்தின் அடி ஆழம் வரை அவதிக்கு உள்ளாக்கியது..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...