❤️ பகுதி - 125 ❤️
சரண் அலைபேசியில் பதித்த முத்தத்தின் சத்தத்திலேயே , குறுகுறுப்பு அவளது உடல் முழுவதிலும் பரவி இருக்க.. நிஜமாலுமே முத்தம் தான் கொடுத்தானா என்று அவளின் சந்தேகம் தெளிவதற்கு முன்பாகவே , அவன் அழைப்பையும் துண்டித்து இருந்தான் .
சரண் கூறிய மிஸ் யூ என்ற சொல்லும் உயிரின் ஆழம் வரை அவளை தீண்டி இம்சித்துத்து இருக்க , சரணின் புகைப்படத்தையே அழுத்தமாக வருடியவளாய் , ' முட்டாள்..', என்று மனம் மான்சியை திட்டினாலும் , 'எப்படி இந்த மான்சி யக்காவாள இவியளால விட்டு போக முடிஞ்சது..', என்று நினைக்காமலும் அவளால் இருக்கவே முடியவில்லை .
முகத்தில் இறுக்கத்தையும் கண்களில் அக்னியையும் , அவன் அதரங்கள் உதிர்க்கும் சொற்களோ , துப்பாக்கி முனையை விடவும் கூர்மையாக வெளிப்படுத்துவதாக , முற்றிலும் மாறுப்பட்டவனாய் இருக்கும் இந்நிலையிலும் , அதட்டலாக.. மிரட்டலாகவே இருந்தாலும் , அவன் மனைவி என்னும் உறவிடம் காண்பிக்கும் அன்பிலோ சிறு குறைவு இருந்ததே இல்லை . இப்பொழுதே , தன்னிடம் இப்படி என்றால்.. மான்சியிடம் மண்டியிடவும் தயங்காதவனாய் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பான் என்று எண்ணியவளுக்கோ தன்னிச்சையாக அவர்களது அறையில் ஏற்கனவே , மான்சி மற்றும் சரண் ஜோடியாக இருந்த புகைப்படத்தின் பக்கத்தை காண.. அதுவோ , எப்பொழுதோ அகற்றப்பட்டு , தாமரையும் அவனுமே ஜோடியாக நிறைத்து இருந்தார்கள் .
அவர்கள் இருவருமாய் பேருந்தில் எடுத்த படத்தையே மாட்டி இருந்தான் . சரணின் கண்களில் அளவுக் கடந்த காதலை தேக்கியே இருந்தாலும் , அவற்றையும் தாண்டி அவன் விழிகளில் பிடிவாதமே மேலோங்கி இருப்பது போல் அவளுக்கு தோன்றுவதாய்..
எப்பொழுது அகற்றினான் என்றே தெரியவில்லை . ஆனால் , தாமரைக்கு இன்று வரை அப்புகைப்படத்தை அகற்றியது குறையாகவே இருப்பதும் மறுப்பதற்கு இல்லை . அவள் மித்ரன் ஸாரின் கண்களில் என்றும் மிளிரும் அந்த மென்மையான கனிவை காணவே , மனம் ஏங்குவதையும் தவிர்க்க முடிந்ததே இல்லை.
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...