வா.. வா.. என் அன்பே - 125

1K 37 12
                                    

பகுதி - 125 ❤️

சரண் அலைபேசியில் பதித்த முத்தத்தின் சத்தத்திலேயே , குறுகுறுப்பு அவளது உடல் முழுவதிலும் பரவி இருக்க.. நிஜமாலுமே முத்தம் தான் கொடுத்தானா என்று அவளின் சந்தேகம் தெளிவதற்கு முன்பாகவே , அவன் அழைப்பையும் துண்டித்து இருந்தான் .

சரண் கூறிய மிஸ் யூ என்ற சொல்லும் உயிரின் ஆழம் வரை அவளை தீண்டி இம்சித்துத்து இருக்க , சரணின் புகைப்படத்தையே அழுத்தமாக வருடியவளாய் , ' முட்டாள்..', என்று மனம் மான்சியை திட்டினாலும் , 'எப்படி இந்த மான்சி யக்காவாள இவியளால விட்டு போக முடிஞ்சது..', என்று நினைக்காமலும் அவளால் இருக்கவே முடியவில்லை .

முகத்தில் இறுக்கத்தையும் கண்களில் அக்னியையும் , அவன் அதரங்கள் உதிர்க்கும் சொற்களோ , துப்பாக்கி முனையை விடவும் கூர்மையாக வெளிப்படுத்துவதாக , முற்றிலும் மாறுப்பட்டவனாய் இருக்கும் இந்நிலையிலும் , அதட்டலாக.. மிரட்டலாகவே இருந்தாலும் , அவன் மனைவி என்னும் உறவிடம் காண்பிக்கும் அன்பிலோ சிறு குறைவு இருந்ததே இல்லை . இப்பொழுதே , தன்னிடம் இப்படி என்றால்.. மான்சியிடம் மண்டியிடவும் தயங்காதவனாய் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பான் என்று  எண்ணியவளுக்கோ தன்னிச்சையாக அவர்களது அறையில் ஏற்கனவே , மான்சி மற்றும் சரண் ஜோடியாக இருந்த புகைப்படத்தின் பக்கத்தை காண.. அதுவோ , எப்பொழுதோ அகற்றப்பட்டு , தாமரையும் அவனுமே ஜோடியாக நிறைத்து இருந்தார்கள் .

அவர்கள் இருவருமாய் பேருந்தில் எடுத்த படத்தையே மாட்டி இருந்தான் . சரணின் கண்களில் அளவுக் கடந்த காதலை தேக்கியே இருந்தாலும் , அவற்றையும் தாண்டி அவன் விழிகளில் பிடிவாதமே மேலோங்கி இருப்பது போல் அவளுக்கு தோன்றுவதாய்..

எப்பொழுது அகற்றினான் என்றே தெரியவில்லை . ஆனால் , தாமரைக்கு இன்று வரை அப்புகைப்படத்தை அகற்றியது குறையாகவே இருப்பதும் மறுப்பதற்கு இல்லை . அவள் மித்ரன் ஸாரின் கண்களில் என்றும் மிளிரும் அந்த மென்மையான கனிவை காணவே , மனம் ஏங்குவதையும் தவிர்க்க முடிந்ததே இல்லை. 

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now