பகுதி - 78
பெருங்கோபம்.. ஆத்திரம்.. இயலாமை என அனைத்து உணர்வுகளுடனும் போராடிக் கொண்டிருந்தவனுக்கு , தாமரையின் மித்ரன் என்ற அழைப்பு சாமரம் வீசியதாக இருந்தது. ஆனாலும் , வலியையும் மறக்க முடியாததாகவே இருக்க.. விறைத்தவனாக நின்றிருந்தான் . இதே அறையில் எத்தனையோ நாட்களாக.. அந்த குரல் இசைந்திருக்க.. இல்லை அவளது குரல் நிறைந்திருக்க.. அவள் என்று தெரியாமலேயே.. அவள் மடியிலேயே புதைந்து.. கதறிய இரவுகளை நினைத்தாலே.. உடல் கூசிவது போல்.. அந்த நினைப்பை ஏற்றுக் கொள்ள முடியாதவனாகவே.. அவள் முகமும் காண மறுத்தவனாக இருந்தான் .
ஆனால் , இன்று அவளது அழைப்பு கட்டிப்போட்டதோடு அல்லாது.. அதில் ஏக்கத்தையும் இணைத்து.. தனது பலவீனத்தில் குறிப் பார்த்து.. அடிப்பவளை , அறையவும் முடியாமல்.. தடுக்கும் தன் மீதே மிகுந்த சினம் எழ.. அதனை அவளிடத்தே காட்டியவனாக.. இதழை கடித்து இம்சித்திருந்தான் .
தன் ஆத்திரம் தீர ஷவருக்கடியில் நின்ற பின்பும் ஏனோ , உடலின் உஷ்ணம் அடங்காமல் இருக்கவே , அப்படியே , விழிமூடி நீரில் நனைந்துக் கொண்டே இருந்தவனுக்கு தாமரை இருக்கும் இடத்திற்குள் நுழையவே வெறுப்பாக இருந்தது . திடீரென்று , அவளது பேச்சுக் குரலும்.. சிரிப்பொலியும் கேட்ட பிறகோ , உச்சம் தொட்டதாய்..
நறநறவென பற்கள் அரைப்பட.. அங்கேயே தேங்கியவன்.. கதவை அடைக்கும் சத்தம் கேட்ட பிறகே வெளி வந்திருந்தான் . அவளை காணக் கூடாது என்பதற்காக , அவளை ஏதும் செய்யாது , தானே ஒளிவது போல் அவள் கண்முன் தோன்றாமல் கண்ணாமூச்சி ஆடுவதை , நினைத்து ஆர் . பீ. எஸ்ஸின் ஈகோ கொதித்திருக்க.. பெருமூச்சை வெளியேற்றி , விரைவாக தீர்வு காண வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகே.. மனம் சமன்பட்டது போல்..
எவ்வளவு துன்பத்தை கொடுப்பதாக இருந்த போதும்.. எட்டாண்டுகளான பழக்கம்.. அவனது அறைக்குள் இருந்தாலே.. விரல்களோ தட்டிவிடும் இசைத்தட்டினை.. ஆழம் வரை ஊடுருவிய வலி எழும்புவதையும் தவிர்க்க முடிந்தது இல்லை.. தெரிந்ததாகவே இருந்தாலும்.. அவளது மதுக்குரலுக்கு அடிமையானவன் போல் விரல்கள் மறக்காமல் தட்டிவிட்டும்.. அதுவே , இன்றும் நடந்தேற..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...