பகுதி - 110
எவ்வளவு முயன்ற போதும் , கட்டுக்கு அடங்காமல் கண்ணீர் வழிந்தோட நின்று இருந்தாள் தாமரை . அவன் உயரம் மறந்து , தாயிடம் ஆறுதல் தேடும் சிறு குழந்தையை போல் அவளது இடையைக் கட்டிக் கொண்டு கதறுபவனின் தலைக்கோதவே மெல்லியாலின் விரல்கள் தவியாய் தவித்தாலும் , தன்னைத்தானே அடக்கி ஆண்டவளாய் இரும்பு என நின்று இருந்தாள் .
அவ்விருவருக்கும் தனிமையை கொடுக்க விரும்பியவர்களாக , விலகியே இருந்தாலும் , அவர்களின் அனைவரின் கவனமும் சரண் மற்றும் தாமரை இடத்திலேயே நிலைத்து இருந்ததாய் . தாமரையின் கோபத்தை அறிந்தவர்களால் சரணின் மனதில் என்ன ஓடுகிறது என்று சரிவர புரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தார்கள் என்றே கூற வேண்டும் .
தன் அறையை விட்டே வெளி வராதவனாய் , சரண் இருந்த போதும் , தாமரை ஆரவ் மற்றும் மான்சியுடன் இருப்பதை அறிந்த பின்பும் எவ்வித உணர்வுகளையும் வெளியிடாமல் இருக்கவே.. பெரியவர்களால் அவன் நினைப்பை பற்றி புரிந்துக் கொள்ளவே இயலவில்லை . எதுவாக இருந்தாலும் , அவன் வாயில் இருந்தை வெளி வரட்டும் என்று நெஞ்சை கல்லாக்கியவர்களாக அமைதி காத்து இருக்க.. அதுவும் , இன்று காலை வரை மட்டுமே நிலைக்கச் செய்ததாய் .
தாமரையின் பேச்சு , ரிச்சர்ட் மற்றும் விக்கி தவிர அனைவருக்குமே பெரும் அதிர்வை நிகழ்த்தி இருந்தது . ஒரு பெண்ணிடம், அத்துமீறி நடந்துக் கொள்ளும் அளவிற்காக மிருகமாய் மாறி போனான் என்று பெண்கள் அதிர செய்து இருந்தது என்றால் தாமரையின் தொடர் பேச்சோ , ' அய்யோ..', என்று கையறு நிலைக்கு அழைத்துச் சென்றதாய் .
தன் நண்பனின் இத்தகைய நிலைக்கு காரணமாக இருந்தவளின் மீது அத்தனை கோபமும் திரும்ப தீ பார்வையால் மான்சியை எரிக்க நினைத்து திரும்பியவளுக்கு , மேலும் அதிர்வு அலைகள் காத்து இருக்க.. ஸ்தம்பித்துவிட்டாள் .
உடல் விரைக்க நின்று இருந்தாலும் , மான்சியை தோளோடு அணைத்து தாங்கியவனாய் ஆரவ் நின்று இருக்க.. மான்சியோ , அவனது தோள் வளைவில் முகம் புதைத்தவளாய் அழுது துடிக்க.. சரணின் கதறலை கேட்ட பிறகோ , அவனை விட்டு வேகமாக நகர முற்பட்டவளை இழுத்து பிடித்து வைத்து இருந்தான் என்றே கூற வேண்டும் .
STAI LEGGENDO
வா.. வா... என் அன்பே...
Storie d'amoreகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...