பகுதி - 83
தாமரை ஒரு முடிவிற்கு வந்துவிட்ட பிறகு , அவளால் பூனை போல் சுற்றிக் கொண்டிருக்க முடியாமல் , குளியலறைக்குள் புகுந்து சரண் வர சொல்லி இருந்த இடத்திற்கு கிளம்ப தயாராக.. மிருதுவான புடவையை ஆசையுடன் வருடியவள் கச்சிதமாக தைக்கப்பட்டிருந்த ப்ளவுசை நினைத்து முகம் சிவந்த போதும்.. ஆசையுடன் புடவை அணிந்தவளாக , மெல்லிய ஒப்பனையுடன் வெளியேற கதவு திறக்கவும்.. சரண் அறையின் உள்ளே நுழைவதற்கு கதவில் கை வைக்கவும் சரியாக இருந்தது .
சரணின் வருகையில் திகைத்து தடுமாறியவளாக , ஸ்தம்பித்து நின்றிருந்தவளை உச்சி முதல் பாதம் வருடியவனின் விழி வீச்சை தாளாதவளாய் ,
" என்னைய வர சொல்லீட்டு , நீங்க வீட்டுக்கு வந்திருக்கீய..", என்று அவசரத்துடன் மொழிய ,
" ஏன் மேடம் எங்களோட எல்லாம் வர மாட்டீங்களோ..", என்றவனாக ஆடைகளை கலைந்துக் கொண்டிருந்தான் .
" நான் எப்போ அப்படி சொன்னேன்.. ", என்று முனங்கிக் கொண்டே அவனுக்கான ஆடைத் தேர்வில் இறங்கி விட..
" ஃபார்மலா எடுத்து வை..", என்றவனாக குளிர்யலறைக்குள் புகுந்துக் கொண்டான் .
' புடவையை வாங்கி கொடுக்க தெரியுது.. ஆனா , எனக்கு நல்லா இருக்கா இல்லையான்னு சொல்றாவளா பாரு..', என்று முணுமுணுத்து திரும்ப.. கரங்களை கட்டிக் கொண்டவனாக பார்த்திருந்தான் .
அதனை சற்றும் எதிர்பாராதவளோ , கண்களை உருட்டியவளாக நின்று மேலும் காந்தம் போல் அவளிடத்தே அவனை எழுக்க.. " நல்லா இருக்கா இல்லையான்னு இங்கிருந்தே சொல்ல தெரியாது.. உனக்கு ஓகேன்னா சொல்லு நான் பக்கத்தில வந்தே சொல்றேன்.. ", என்றதோடு அல்லாமல் முன்னேறுவது போல் அடி எடுத்து வைக்கவும் , " ஆத்தீ.. ஆள விடுங்க..", என்று அலறியவளாக விரைந்தோட..
வாய்விட்டு நகைத்தவன் , " அந்த ஆளோட படத்தை நம்மளே வாங்கியாச்சு.. அதுவும் , அவனுக்கு அதிகமான லாபம் வர மாதிரி..", என்று சத்தமாக கூறியதில்.. ஓட்டம் எடுத்த பாதங்களோ , அப்படியே நின்றுவிட்டது . ஒற்றை புருவம் உயர்த்தியவளாய் , அவன் முகம் கண்டவள் , " திடுதிப்புன்னு ( திடீரென்று ) ஏன்..", என்றாள் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...