பகுதி - 106
வானில் நட்சத்திரங்களின் ஊர்வலம் தெளிவாக தெரிய துவங்கிய பின்பும் ஆரவ் தங்களின் வீட்டுக்கு திரும்பி இருக்கவில்லை . தாமரைக்கு தங்க அறையை காட்டியதும் நுழைந்தவள் தான்.. இரவு உணவு அருந்தவும் வெளி வர வில்லை . இன்னும் , எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையையும் தன்னால் தனித்து சமாளிக்க தெரியாது.. முடியாது என்பதை முழுமையாக புரிந்த தருணமாக நினைத்து உள்ளங்கையில் வைத்து இருந்த அலைபேசியையே வெறித்தவளாக , மான்சி அமர்ந்து இருந்தாள் .
இருபது முறைக்கு மேல் ஆரவ்விற்கு அழைத்த பின்பும் , மான்சிக்கு தொடர்பு கொள்ள இயலவில்லை , ' ஸ்டுபிட்.. மொபைல ஒழுங்கா சார்ஜ் போட்டே வைக்க மாட்டான்.. இவனுக்கு எதுக்கு செல் ஃபோன்னு தெரியலை..", என்று தனக்குள் எழும் பதற்றத்தை.. அவன் மீது பலி சுமத்தியவளாய் இருந்தவள் , இரண்டு சாப்பாத்திகளை வயிற்றுக்குள் தள்ளி , பழசாறுடன் ஆர்வ் வரவிற்காக காத்து இருக்க துவங்கினாள் .
வீட்டின் நிசப்தத்தை கிழித்து , அவளுடைய அலைபேசி இசைக்கவும் , அவசரமாக அழைப்பை ஏற்றவளோ , ஹலோ என்றும் விழும்பாது , " ஆரவ்.. உங்களுக்கு எத்தனை தடவை கால் பண்றது. ஏன் , நாட் ரீச்சபிள்லையே இருக்கு..", என்று பொறிந்து தள்ள..
எடுத்ததும் இப்படிப்பட்ட வெளிப்பாட்டை அவளிடம் இருந்து கிடைக்கும் என்று நினைக்காதவன் , வியப்பில் ஆழ்ந்த போதும் , " வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ் பேபி.. என்னோட , பேச இவ்வளவு ஆர்வமா இருந்து இருக்க.. இது தெரியாம நான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணீட்டேனே..", என்று குதூகலத்துடன் ஆரவ் குரல் ஒலித்து இருந்தது .
" ம்ச்சு.. ", என்று சலிப்புடன் ஒலி எழுப்பி இருந்தாள் அவனது மனையாள்..
அதனை கண்டுக் கொள்ளாது , "சொல்லு பேபி.. அப்படி என்ன முக்கியமான விஷயம்..", என்று முகத்தில் அரும்பிய குறுஞ்சிரிப்பு மாறாதவனாய் , தன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டவாறே , மனைவியுடன் பேச்சில் ஈடுபட்டு இருக்க..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...