பகுதி - 44
அந்த கட்டிடமே இடிந்து விழும் அளவிற்கு, கர்ஜித்தவனை கண்டு.. அச்சத்தால் , இரண்டடி பின்னே நகர்ந்திருந்தாள் தாமரை . ஏற்கனவே, அவமானத்தில் குறுகி நின்றிருப்பவளுக்கு.. இப்பொழுது சரணும் , அவ்வாறு கூறி.. இதயத்தை கசக்கி பிழிந்து மரண அடியை வழங்கியதில் .. தாமரையின் நிலை வரையறுக்க முடியாததாகவே இருந்தது என்றால்.. அங்கு பணிபுரிவர்களுக்கோ.. இதயம் தொண்டையில் வந்து நின்று.. அடைத்துக் கொண்டது போல் ஆனது .
தாமரை.. அவளிடத்தில் கூறுவதாக நினைத்து.. பூமிக்குள்ளேயே தலையை விடுபவளாக குனிந்திருக்க.. ஆனால் , அவனது சிவப்பேறிய விழிகளோ , எதிரே நின்றிருந்தவர்கள் மீது இருந்தது .
" ஸார்.. ஷீ... டு..க்.. த..ட்..", என்று ஆரம்பித்தவளை முடிக்கவிடாமல் ,
" ஷட் ஆப்.. ", என்று வாய் அடைக்கச் செய்தவன்..
தாமரையின் அருகே சென்று.. வேகமாக , அவளது தாடையை பிடித்து நிமிர்த்தி.. நேருக்கு நேராக முகம் காண வைத்து , " என்ன நடந்தது..", என்று கூர்மையுடன் வினவ.. மென்குரலில் , நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாலும் , விழிகளை இறுக்கமாக மூடி.. அழுகையை அடைக்கப் போராடிக் கொண்டு ,தனக்குள்ளேயே உழன்றவளாக இருந்தவளின் செவிகளில்.. திடீரென்று , அவன் குரல் செவிகளை தீண்டி சில்லிட வைத்திருந்தது .
" இவ்வளவு நடந்தும்.. உனக்கும்.. என்னை உன் புருஷனா வெளில சொல்லிக்க முடியலை.. இல்லை..", என்று எவருக்கும் கேட்காதவாறு.. கூர்மையாக வினவவும்.. அவள் விழிகளில் வழியும் வலியையும் விட அதிகமாகவே , தெரிந்ததோ.. என்று திகைத்து நிற்கும் பொழுதே.. அவளைவிட்டு விலகியிருந்தான் ,
" மாம்.. இன்னும்.. ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம் கூட.. இந்த ஃப்ளோர்ல வொர்க் பண்ணினவங்க.. யாரும் இனிமேல் இங்க இருக்க கூடாது.. எல்லோரையும் வெளிய அனுப்புங்க..", என்று கட்டளையிட்டவனாய்..
புயல் வேகத்தில் வெளியேற முயன்றவனை.. அவசரமாக பேசிய தாமரையின் குரல் , "அத்தை.. பாவம் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க..", என்று கூறி அவனை தேக்கியிருந்தாள். அதே வேகத்தில் திரும்பியவனின் கூர்மையான பார்வையை .. ஏறிட தைரியம் அற்றவளாக , மயூரியின் பக்கமாக தன் பார்வையை திருப்பிக் கொள்ள..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...