பகுதி - 34
சரண் வெகு இயல்பு போல் , கடந்த பதினைந்து நாட்களாக அனைவரிடமும் காட்டிக் கொண்டாலும் , தாமரை அவனிடம் மட்டுமே விலகி இருக்கும் செயலால் , சுழற்றி அடித்த சுனாமி தாக்கியது போல் அவன் மனம் சிதைந்து வெறுமையில் திண்டாடுவதை அவன் மட்டுமே அறிவான் .
ரிச்சர்ட் உரைத்த உண்மை வெகுவாக தாக்கிடவே விலகிவிட்டான் . அவன் கூறியது போல் பணத்திற்காக மனைவியாக அழைத்து வரப்பட்டவள்.. என் மனைவி அல்ல என்று உருப்போட்டவனாக திரிந்தாலும்.. நொடிக்கு நொடி தாமரையின் நலனிலேயே வந்து நிற்க.. ஒருவருக்கு தெரியாமல்.. அவளை கண்காணிக்க ஆள் ஏற்பாடு செய்திருந்தான் . அழுகையால் மட்டுமே கரைந்துக் கொண்டிருக்கிறாள்.. யார் பேச்சையும் கேளாமல் தனக்குள்ளாகவே மறுகி துடிக்கிறாள்.. என்று தெரிந்தவுடன் , அவளை காண தேடி ஓடி வந்துவிட்டான். அவள் நலனில் மட்டுமே அக்கறைக் கொள்வது ஏன் என்று யோசிக்கவும் அஞ்சி இருந்தான் .
இரு வாரங்களில் தெளிந்துவிடுவாள் என்று அவன் காத்திருக்க.. வாரங்கள்.. அல்ல மாதங்கள் ஆனாலும் வருடங்கள் ஆனாலும்.. இவர்களின் இழப்பில் இருந்து வெளிவரவே முடியாது.. என்று புரிந்த தருணமாக , கைச் சிறைக்குள் நெஞ்சில் புதைந்து ஊமையாய் அழுதுக் கொண்டிருப்பவளின் நிலை உணர்த்த..
எப்படி எவ்வாறு அவளை அமைதிப்படுத்துவது என்று தெரியாமலேயே , ஆறுதல் அளிக்க.. மனைவியின் அடைக்கலமும் , நெகிழ்வும்.. வெளிப்படுத்திய மெல்லிய உரிமையான அணைப்பும் என்று மொத்தமாக , தடம் புரண்டவன்.. ஆறுதலுக்காக அளித்த முத்தம்.. கொஞ்சம் கொஞ்சமாக கணவனுக்குரிய விதத்தில் இடம் மாறியதாய் .
சரணின் அணைப்பு மேலும் இறுக.. தாமரைக்கோ , உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் புதுவித உணர்வு.. அதன் கணம் தாளாமல்.. மெல்லிய நடுக்கம் , நெகிழ்வு என்று அவள் உடல் வெளிப்படுத்த.. அணைப்பிற்குள் இருந்தவளின் வேகமான இதயத்துடிப்பையும்.. சரணாலும் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...