பகுதி - 117
கடந்த சில நாட்களாக தாமரையின் கோபம் , சரண் மித்ரனின் இதயத்தில் ஊடுருவி வலியை ஏற்படச் செய்து இருந்தாலும் , கர்ப்பிணி பெண்களுக்குஃ எ இயல்பாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் , அவளது சினமும் எக்ஸ்ட்ரீம் லெவலில் இருப்பதாக நினைத்தே மௌனித்து , குழந்தையையும் அவளையும் பாதுகாத்துக் கொண்டான் என்றே கூற வேண்டும் .
ஆனால் , இப்பொழுது அவளது கண்களில் தோன்றி மறைந்த மின்னலை கண்ட பிறகோ , அவள் வயிற்றில் குழந்தையுடன் இருப்பதால் மட்டுமே மான்சியின் வீடு என்றும் பாராமல் வந்து இருப்பதாக நினைத்து வருந்தி இருக்கிறாள் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடிந்தது . ஆனால் , ஏன் மீண்டும் இந்த விலகல்.. அதுவும் தன்னிடம் ஏன் அவளது உணர்வுகளை காண்பிக்காமல் அவசரமாக வெளியேற வேண்டும் என்ற சிந்தனையால் தன்னைத் தானே குழப்பிக் கொண்டாலும் , "ரொம்ப படுத்துற டீ..", என்று புலம்பியவனாக , பெருமூச்சை வெளியேற்றி , தற்காலிகமாக அதனை ஒற்றி வைத்தவன்.. அறையில் இருந்து வெளியே செல்ல நினைக்க , அவளது அலைபேசியின் அலறல் சத்தம் .
' இவளுக்கு எதுக்கு மொபைல்ன்னே தெரியல..', என்று வாய்விட்டே புலம்பியவாறே , படுக்கையில் இருந்ததை எடுத்தவன்.. தன்னிச்சையாக , கண்கள் அதன் திரையில் பதிக்க.. சரணின் தாடை இறுக்கத்திற்கு தாவி , குழப்பம் தொலைந்து கடுகடுத்து போனதாய் .
லிஃப்ட்டிற்குள் இருந்து கீழ் இறங்கி வந்தவளோ மிகுந்த கவனத்துடனே , பாதத்திற்கு நோகுமோ அல்லது பூமிக்கு நோகுமோ என்று எண்ணும் அளவிற்கு மெதுவாகவே நடந்து சமையல் அறைக்குள் நுழைந்த மறுநிமிடமே ,
" வாடா ம்மா.. இவ்வளவு லேட்டா எழுந்திரிக்கலாமா..", என்று அவளை செல்லமாக கடிந்த சாவித்ரி , அவளுக்காகவே ஒரு நாற்காலி அங்கு போடப்பட்டு இருக்க.. அதில் மெதுவாகவே அமர வைத்தவராக , "இந்தா இந்த டீயை குடி..", என்று அமர்த்தளாகவே கண்டிக்கவும் , சிறு புன்னகையுடன் பெற்றுக் கொண்டவள் , மெதுவாக பருகிக் கொண்டு இருக்கும் பொழுதே ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...