ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..
சும்மா சும்மா ஸாரி கேட்க கூடாது பட் சாரி.. லேட் அப்டேட்டுக்கு.. மொபைல் இல்லை ஸோ போஸ்ட் பண்ண முடியலை... மோர் தேன் 4000 words.. ஸோ , என்னை திட்டாம படிங்க.. கமென்ட் பண்ணுங்க.. நான் மெஸேஜ் கூட இன்னும் பார்க்கவில்லை ப்பா.. அதுனால , உங்க எல்லாருக்கும் பதில் போடலை.. தவறாக நினைக்க வேண்டாம் . முடிந்த வரை.. லேட் பண்ணாம போஸ்ட் போட முயற்சிக்கிறேன் . எடிட் பண்ணவே இல்லை மிஸ்டேக்ஸ் இருந்தாலும் ஸாரி..😁😁😁😁
இப்படிக்கு
கனி தேவ் 💕💕💕💕
பகுதி - 79
விளம்பர அட்டைகளில் மட்டுமாக பார்த்திருக்கும் ஆடம்பரக் கார்களுள் ஒன்று.. ஒருமுறைக்கு இரு முறையாக , அப்புத்தகத்தில் இருக்கும் படத்தின் பக்கத்தை பார்வையை திருப்பினாலும் ,
" போடீ.. போக்கத்தவளே..", என்று தாயின் வசவுகளும் துண்டுச் சீட்டு போல் இணைந்துவிடும்..
கனவிற்காகவும் நினைக்க மறுக்கும்.. இத்தகையான வாகனங்களின் நினைப்பற்றவளாய் இருப்பவள் தாமரை.. ஆனால் , இன்று அவ்வகைகளில் ஒன்றாக இருக்கும் வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள்.. தன் மாமனரின் பிடிவாதத்தால்.. அவர் கொண்டிருக்கும் அளவிற்கு அதிகமான பாசத்தின் அடையாளமாய் .இதுநாள் வரை , அவர்கள் இல்லத்தில் இருக்கும் கார்களின் எண்ணிக்கையோ.. பெயர்களையோ.. ஏன் இருக்கும் இடத்தையும் அறிந்து வைத்திருந்தது இல்லை. அவ்வாறு இருப்பவளுக்கு எங்ஙனம் இதன் பெயரை அறிந்து வைத்திருக்க..
ஓட்டுனருடன் , படகு போல் சாலையை நிறைத்து இருக்கும் தங்க நிற , அதீத சொகுசான மகிழூந்தில் பயணத்தில் ஈடுபட்டிருந்தவளுக்கோ , ராம் காட்டும் அக்கறையிலும்.. சரணின் எண்ணப் போக்கிலும் மூழ்கியவளாக இருந்தாள் .
சரண் நிராகரிப்பாய் நடந்துக் கொள்ளும் நிஜத்தையும் ஏற்க மறுக்கும் மனதுடன் போராடியவளாய் இருந்தாள் என்றால் மிஙச் சரியாக இருக்கும் . தம் நிலையை யோசித்து முடிப்பதற்கு முன்பாகவே , சேரும் இடமும் வந்திருக்க.. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவளாக இறங்க முனைகையில் , கார் கதவை திறந்து பணிவுடன் நின்றிருந்தார் ஒருவர் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...