பகுதி - 87
தன் நினைவுகளிலேயே மூழ்கி படுத்து இருந்தவளுக்கு , படார் என்று சத்தம் கேட்டதில் அடித்துப்பிடித்து எழ.. கீழே விழுந்த பேனா ஸ்டேன்ட் மற்றும் தரையில் சிதறிக் கிடந்த பொருட்களை சேகரித்தவனாய் சரண் இருந்தான் .
" தூங்கலையா..", என்று மென்குரலில் தாமரை வினவியவளாக.. அவளும் , வேகமாக படுக்கையில் இருந்து இறங்கி பொருட்களை எடுக்க.. அவனோ , காதில் விழாதவன் போலவே செயல்பட்டு.. மேஜையின் மீது அதன் இடத்தில் வைத்தவன்.. அவனுடைய லேப்டாப் பேக்கை கரத்தில் எடுத்துக் கொண்டு வெளியேற செல்கையில்..
" பேசவே மாட்டீயளா..", என்று பரிதவிப்பை மட்டுமே தாங்கியவளாய்.. எவ்வளவு முயன்றும் தோற்று.. கண்ணீருடன் அவன் முன் நின்று கெஞ்ச..
" அதான் எனக்கும் சேர்த்தே நிறைய நீயே பேசீட்டியே.. ", என்று முகத்தில் உணர்ச்சிகள் துடைத்தவனாய் , மீண்டும் நகர முற்பட..
" ஒரு.. ஒரு நிமிஷம்.. நான் சொல்ல வரதை கேளுங்களேன்..", என்று அவனை முன்னேற விடாமல் தடுத்தவளாக மன்றாட..
" சொல்றதுக்கு பாக்கி இருக்குன்னு நினைக்கிறியா.. ", என்று சீறியவனின் விழிகளில் எப்பொழுதும் தென்படும் மென்மையும் மயக்கமும் அழியப்பட்டு.. ரௌத்தரமாய் ,
" நான் ஒரு முட்டாள்ன்னு சொல்லாம சொல்லீட்ட.. ", என்று உறுமலை வெளியிட்டவனாக நகர முற்பட.." இந்த நேரத்தில எங்குட்டு போறீய.. அக்கா வருந்துவாக..", என்று தன் உள்ள உதறலையும் தனக்குள் புதைத்தவளாக நடுங்கிக் கொண்டே , அவசரமாக கூறி தடுத்திருந்தாள்..
இறுக்கமாக விழிகளை மூடித் திறந்தவனுக்கோ.. ஒரு நிமிடம் எதுவும் பேச முடியவில்லை . உள்ளத்தின் குமுறல் இருக்கும் இடத்தின் நினைவால் வார்த்தைகளை சிதறடிக்கவும் பிடித்தம் இல்லாமல் போகவே.. அவள் இருக்கும் அறையே மூச்சு முட்டும் உணர்வை அதிகரிக்க செய்திருந்ததாய் . மான்சி கொடுத்த அடி , குடி போதையில் அனைத்தையும் மறக்க வைத்திருந்தது என்றால்.. அது தாமரையிடத்தில் பலிக்கவில்லை என்பதே நிஜம்.. ஏமாற்றமே மிதமிஞ்சியதாய் . மரண வலியையும் தாண்டியதாய் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...