பகுதி - 107
தாமரை சரணின் வீட்டை விட்டே வெளியேறிவிட்டாள் என்று தெரிந்த மறு நொடியே , மதுரையில் இருந்து புறப்பட்டு இருந்த விக்கி.. நண்பனின் இல்லத்திற்கு நள்ளிரவு என்றும் பாராமல் வந்ததும் இல்லாமல்.. எதிர்ப்பட்டவனை ஓங்கி அறைந்து இருந்தான் .
இத்தகைய செயலை அங்கு இருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை . ஆனாலும் , அமைதி காத்தவர்களாக பார்வையாளர்களாய் மாறி இருக்க.. கொத்தாக அவன் கழுத்துச் சட்டையை பற்றிய விக்கியோ,
" மனுஷனா டா நீ.. மனுஷனா நீ.. இன்னும் இன்னும் என்னென்ன டா.. அந்த புள்ளைக்கு பண்ணலாம்னு காத்து இருக்க.. எனக்கே , அந்த புள்ளைய பாரீஸில முதன்முதலா பார்த்து கண்ணுக்கு உள்ளேயே இருக்கே டா.. உனக்கு இல்லை.. இப்படி மொத்தமா..", என்று ஆத்திரம் அதிகரித்தவனாய் கண்கள் சிவக்க கத்திக் கொண்டே சென்றவனை சரணின் ஒற்றை பார்வை தேக்கி இருந்தது .
அவன் கண்களில் விரவி இருந்த வலி , தவிப்பு , வேதனை என்று அனைத்து உணர்வுகளையும் சுமந்து இருந்த போதிலும் , அவன் கருவிழிகளில் மின்னல் என மின்னி மறைந்து இருந்த பளபளப்பு.. சரணின் வலியையும் கடந்த கோபத்தை காண்பித்து இருந்ததில் , இரண்டடி பின்னே நகர்ந்தவனாய் அதிர்ச்சியில் உறைந்தவனாய் , தள்ளி இருந்தான் விக்கி .
" இந்த பார்வைக்கு என்ன டா அர்த்தம்..", என்று சீற்றமாக கேட்ட விக்கிக்கு பதில் சொல்லாதவனாய் சரண் நின்றிருந்த போதும் , தனக்குள் ஆத்திரத்தை புதைத்தவனாக எதிரே நின்று இருந்த நண்பனை ஆழமாக ஏறிட்டதுடன் , அவன் அறைக்கே மீண்டும் சென்று மறைந்துக் கொள்ள.. இவ்வாறுண இருப்பவனை எப்படி கையாள்வது என்றே புரியாது , சரண் மித்ரனின் பிடிவாத்தையும் தகர்த்து வழி தெரியாமல் திகைத்துவிட்டார்கள் .
அவன் பிடிவாதத்தை நன்கு அவள் தெரிந்து வைத்து இருந்ததால் தான் அவ்வளவு பிடிவாதமாக அவனை மணக்க வேண்டாம் என்று அவ்வளவு பிடிவாதமாக மறுத்தால் போலும் என்றே அங்கு இருந்த அனைவரையும் சரணின் நடத்தை சிந்திக்க செய்து இருந்தது .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...