❤️ பகுதி - 112 ❤️
தன் பிடிவாதத்தை நொடிக்குள் தகர்த்து எறியும் கணவனின் செயல்களை முழுமையாக வெறுத்து இருந்தாள் தாமரை . அவள் மனதை கொன்றவனே.. அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்க.. ஏனோ , பாவையின் மனம் ஏற்கவும் முடியாது.. அவனை விலகவும் முடியாது.. பெண்டுலமாக ஆடிக் கொண்டு இருந்தது என்றாலும் மிகையில்லை .
பெண்ணவளின் மௌனமும் , வெளிப்படாத நாணம் கலந்த மிரண்ட பார்வையிலுமே.. நிலைக்கொள்ளாமல் தவிப்பவனுக்கு , அவனை அவளுக்கு உணர்த்திவிடும் வேகம்.. அதுவே , அவளது விலகலையும் கணக்கில் கொள்ளாது நெருங்கத் தூண்டிட.. மென்மையாக , பின்னிருந்து அணைத்துக் கொண்டவனாக ,
" பாப்பா.. என்ன டீ இது.. இந்த நேரத்தில தலைய நனைச்சு வச்சு இருக்க.. உடம்புக்கு ஆகுமா..", என்று அவளது கூந்தல் ஈரத்துடன் இருக்கவே வலக்கன்னத்திலும் கழுத்திலும் ஓட்டிக் கொண்டு உறவாடி , அவளது மேனியிலும் முகத்திலும் முத்து முத்தாய் மின்னிக் கொண்டு இருந்த நீர்த்துளிகள் பளபளக்க.. அது மேலும் அவளுக்கு அழகு சேர்க்க .. இடை வரை நெளிந்து வளைந்து நீண்டு இருந்த நுனி முடியில் இருந்தும் சொட்டு சொட்டாய் விழுந்து அவள் சுற்றி இருந்த துணியையும் நனைத்து இருக்க.. மனைவியின் தாய்மை அழகில் இறுக்கியவனாய்.. கண்டிப்பையும் குழைவாக வெளிப்படுத்த..
மனதிற்குள் இருந்த கோபம்.. அவளது உடலுக்கு இல்லை போலும் , கணவனின் சிறு நெருக்கமும் பெண்மையை குழைய செய்ய.. மிகவும் கவனமாகவே , அவள் அறியாமல் நெகிழும் மேனியை இறுக்கியவளாய் அசையாமல் இருந்தாள் .
" பாப்பா.. ஆ..", என்று கிறங்கிய குரலில் அழைத்த போதும் ,
" ம்ச்சு.. ஹேர் ட்ரை பண்ணாம.. இப்போ , ஏன்டீ வார்ட்ரோப் முன்னாடி நிக்கிற... வா.. நான் வேணா ஹெல்ப் பண்றேன்.. வா பாப்பா.. மறுபடியும் , ஹெல்த் ப்ராப்ளம் வர போகுது.. ", என்று பின்னிருந்தே முதுகோடு மொத்தமாக உரசியவனாக அவள் கழுத்தை ஒற்றை கரத்தாலும் வயிற்றை மற்றொரு கரத்தினாலும் மென்மையாக இறுக்கியவாறே சொல்ல ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...