❤️பகுதி - 122❤️
அடர்ந்து இருக்கும் மல்லி பந்தலுக்குள் நுழைந்து.. அதன் மீதே அவளை சாய்த்து , அவனும் அவள் மீது சரிந்து இருக்க . அப்பொழுதும் , அவள் இதழ்களை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவனாகவே முத்தச் சுவையில் மூழ்கி பெண்ணவளை திணற செய்துக் கொண்டு இருந்தான் .
அவள் மேனியின் வெற்று இடங்களில் அழுத்தும் இலைகளோ , காம்பின் கீறல்களோ தாமரைக்கு வலிக்கவே இல்லை . ஆனால் , வெட்டவெளியில் அதுவும் தோட்டத்தில் ஆட்கள் ஆங்காங்கே வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் இடத்தில் அவன் காண்பிக்கும் நெருக்கத்தில் பெரும் படபடப்பிற்கு ஆளாக , அவள் அறியாமலேயே முத்தத்தில் திளைத்து இருந்தவனின் இதழ்களின் பிடியில் இருந்து பதற்றத்துடன் விலக முயற்சித்து . அவளது மென் கரங்களாலும் இரும்பு உடலை அசைக்கும் முயற்சியில் இருக்க ,
சுவைக்கும் முத்தத்தில் ஏற்படும் தடையை வெறுத்தவன் பிடிவாதமாக , மேலும் மொத்த இதழ்களையும் தன்னக்குள் வாங்கியவனாய் கடித்து இம்சித்து விலக முயற்சித்துக் கொண்டு இருக்கும் , அவள் செயலால் அவனின் பிடி இறுகியதே தவிர இளகவில்லை .அவன் காதலை கூறிய பிறகும் , அவளது கூச்சம் கலந்த விலகலால் , " ஏன் நான் தொட்டா என்ன . நான் இவளை தொடாமல்..", என்று புதிதாய் கொப்பளிக்கும் உரிமை உணர்வின் ஆதீக்கத்தினால் , சரணுக்கு கோபம் கிளர்ந்து எழவே கழுத்து நரம்புகள் புடைக்க , அவளை வளைத்து இருந்த இடையின் பிடியில் நெறித்து காண்பிக்க.. பெண்ணவளோ அடங்க மறுத்து இருந்தாள் .
இப்பொழுது , தாமரையின் கண்ணீர் அவன் கன்னத்தையும் நனைக்கவே , சுள்ளென்று , அடக்கி கட்டுக்குள் வைத்து இருந்த சரணுனின் கோபம் அதிகரித்து விடவே ," ச்சை.." , என்றவாறே அடக்க முடியாமல் தன் பிடியை விடுத்து , வேகமாகவே அவளை தள்ளியும் விட , மேலும் கொடியின் மீதே அழுத்தமாக நிலைத் தடுமாறியவளாய் சரிய.. ம்ச்சு.. என்று உள்ளுக்குள் சலித்தவனாய் மணிக்கட்டைப் பிடித்து கீழே விழுந்து விடாமல் , அவனுடன் இடையை வளைத்து பிடித்து நேராக நிற்க வைத்தவன் அதே வேகத்தில் விலகியும் நின்றவன் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...