வா.. வா.. என் அன்பே - 122

1.1K 46 19
                                    

❤️பகுதி - 122❤️

அடர்ந்து இருக்கும் மல்லி பந்தலுக்குள் நுழைந்து.. அதன் மீதே அவளை சாய்த்து , அவனும் அவள் மீது சரிந்து இருக்க . அப்பொழுதும் , அவள் இதழ்களை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவனாகவே முத்தச் சுவையில் மூழ்கி பெண்ணவளை திணற செய்துக் கொண்டு இருந்தான் .

அவள் மேனியின் வெற்று இடங்களில் அழுத்தும் இலைகளோ , காம்பின் கீறல்களோ தாமரைக்கு வலிக்கவே இல்லை . ஆனால் , வெட்டவெளியில் அதுவும் தோட்டத்தில் ஆட்கள் ஆங்காங்கே வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் இடத்தில் அவன் காண்பிக்கும் நெருக்கத்தில் பெரும் படபடப்பிற்கு ஆளாக , அவள் அறியாமலேயே முத்தத்தில் திளைத்து இருந்தவனின் இதழ்களின் பிடியில் இருந்து பதற்றத்துடன் விலக முயற்சித்து . அவளது மென் கரங்களாலும் இரும்பு உடலை அசைக்கும் முயற்சியில் இருக்க ,
சுவைக்கும் முத்தத்தில் ஏற்படும் தடையை வெறுத்தவன் பிடிவாதமாக , மேலும் மொத்த இதழ்களையும் தன்னக்குள் வாங்கியவனாய் கடித்து இம்சித்து விலக முயற்சித்துக் கொண்டு இருக்கும் , அவள் செயலால் அவனின் பிடி இறுகியதே தவிர இளகவில்லை .

அவன் காதலை கூறிய பிறகும் ,  அவளது கூச்சம் கலந்த விலகலால்  , " ஏன் நான் தொட்டா என்ன . நான் இவளை தொடாமல்..", என்று புதிதாய் கொப்பளிக்கும் உரிமை உணர்வின் ஆதீக்கத்தினால் , சரணுக்கு கோபம் கிளர்ந்து எழவே கழுத்து நரம்புகள் புடைக்க , அவளை வளைத்து இருந்த இடையின் பிடியில் நெறித்து காண்பிக்க.. பெண்ணவளோ அடங்க மறுத்து இருந்தாள் .

இப்பொழுது , தாமரையின் கண்ணீர் அவன் கன்னத்தையும் நனைக்கவே , சுள்ளென்று , அடக்கி கட்டுக்குள் வைத்து இருந்த சரணுனின் கோபம் அதிகரித்து விடவே ," ச்சை.." , என்றவாறே அடக்க முடியாமல் தன் பிடியை விடுத்து , வேகமாகவே அவளை தள்ளியும் விட , மேலும்  கொடியின் மீதே அழுத்தமாக நிலைத் தடுமாறியவளாய் சரிய.. ம்ச்சு.. என்று உள்ளுக்குள் சலித்தவனாய் மணிக்கட்டைப் பிடித்து கீழே விழுந்து விடாமல் , அவனுடன் இடையை வளைத்து பிடித்து நேராக நிற்க வைத்தவன் அதே வேகத்தில் விலகியும் நின்றவன் ‌ .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now