பகுதி - 45
கண்களில் நீர் வழிய.. ரிச்சர்டின் முதுகையே வெறித்திருந்தவள்.. அவன் கொஞ்சமும் திரும்பியே பார்க்காமல் , வெளியேறியதும்.. அழுகையில் துடிக்க.. மேஜை மீது தன் கரங்களை வைத்து , அதன் மீது சாய்ந்துவிட்டாள் . உயிரை கொல்லும் வலியை கொடுப்பவனிடமே அடைக்கலம் தேடி.. அழையும் தன் மனதை நினைத்து வெட்கியவள்.. இருக்கும் இடத்தையும் மறந்து... அழுகையில் குழுங்க..
தன் இருசக்கர வாகனத்தில் , ஏறி அமர்ந்தவனுக்கு அது வரை இருந்த பிடிவாதத்தை தொடர , முடியாமல் போனது.. அதன் வெளி வாயிலை பார்க்க.. இதுவரை , அவள் வந்தது போல் தெரியவில்லை.. பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அலட்சியம் காட்ட முடிந்தவனால் , இப்பொழுது , முடியாமல் போக.. வேகமாக , அவளை தேடிச் சென்று.. அவள் முன் நின்றவனோ.. சொல்லொண்ணா , வேதனையில் தத்தளித்தவனாய்.. அதை அவன் அணிந்திருக்கும் முகமூடி எப்பொழுதும் போல் , கவசமாக.. ஐந்து நிமிடங்கள் கடந்தும் , அவள் நிலையில் மாற்றம் இல்லாமல் அழுதுக் கொண்டிருக்கவே , சினம் தலை தூக்க.. வேகமாக , மேஜையின் மீது ஓங்கித் தட்டினான் .
திடீரென்று , ஏற்பட்ட சத்தமும்.. அதிர்விலும் துள்ளி எழுந்தவளை , "வா.." என்ற அழைப்போடு.. முன்னே செல்ல.. முதலில் , அதிர்ந்து பின்.. திகைத்தவள்.. மீண்டும் அவன் காட்டிய அலட்சியத்தில்.. கோபம் கிளர்ந்தெழ.. அசையாது நிற்க.. இரண்டு எட்டுகள் வைத்தவன்.. 'உன்னை நான் அறிவேன் என்பது ', போல் திரும்பி பார்த்து.. ஏளனமாக உதட்டை சுழித்தவன்..
" எனக்கு தெரியும்.. நீ இப்படி தான் பண்ணுவன்னு.. தேடி வந்தேன்ல.. என்னை சொல்லணும்.. ஒழுங்கு மரியாதையா வா.. தேவை இல்லாம சீன் க்ரியேட் பண்ணாம.. எல்லோரும் , நம்மளையே பார்க்குறாங்க.. ", என்று உதடுகள் அசைகிறது என்பது தெரியாத அளவிற்கு இறுகிக் கிடந்தாலும்.. குரலில் இருந்த உறுமல் மட்டும் குறைவில்லாமல் வெளிப்பட.. வேக வேகமாக.. அவளது மொபலை எடுத்துக் கொண்டு பின்னோடு ஓடினாள் .
அவனுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து.. மீண்டும் அழுத்தமான பார்வை பார்க்க.. அலைஅலையாய் , உள்ளுக்குள் எரிச்சல் மண்டினாலும்.. அமைதியாக , ஏறிக் கொண்டாள் . "பின்னாடி உட்காருன்னு சொன்னா.., வாய் முத்தா குறைஞ்சிடும்..", என்று முணுமுணுக்க.. கடையோரத்தில்.. துடிக்கும் உதடுகளை மறைத்தவனாய்.. மீண்டும் ஆக்சிலேட்டரை.. முறுக்கிக் கொண்டு.. கண்ணாடியின் வழியே.. அவளை மட்டுமே பார்த்திருக்க.. இவ்வளவு நிமிடங்களாக.. தன் கட்டுப்பாட்டிற்குள் இருந்த உதடுகளால்.. முடியாமல் போகவே.. " ரிட்ச்சா.. நீ ரொம்ப பண்றடா.. சொல்லிட்டேன்.. என் தோளை பிடிச்சிட்டு உட்காருன்னு சொல்ல கௌரவம் பார்க்கும் போது.. நான் மட்டும் வெட்கம் கெட்டு.. பிடிப்பேனா.. திரும்பியே பார்க்காம போனதுக்கு .. வேற எவளா இருந்தாலும்.. நடக்கறதே வேற.. நானுங்கறதால.. நீ மிரட்டதும்.. பேசாம வரேன்.. சொல்லீட்டேன்.. நீ சொல்லாம.. நான் உன்னை பிடிக்க மாட்டேன்டா..", என்று கூறியவள்.. 'உன்னால் முடிவதை செய்துக் கொள்.. ' என்று தெனாவட்டாக பார்த்த அடுத்த நொடி.. அவன் தோளை மட்டும் அல்ல.. இரு கரங்களால்.. அவன் இடையை இறுக்கிப் பிடித்து.. தன் முழு இடையையும் அவன் மீது சாய்த்து கண்களை அழுத்தமாக மூடியிருந்தவளாய் இருந்தாள் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...