பகுதி - 42
ஆரவ் மிக பெரிய தயாரிப்பாளரின் மகன்.. கல்லூரி படித்த நாட்களிலேயே , மாடலிங் உலகில்.. மிகவும் பிரபலமானவன்.. இருவரும் அந்த துறையில் இருக்கும் பொழுதே , நெருங்கி நண்பர்களாக இருந்தவர்கள் . மான்சியின் முதல் பட வாய்ப்பு அவர்களுடைய நிறுவனத்தில், ஏற்படக் காரணமானவனும் அவனே.. மான்சியை அவன் விரும்பியிருக்க.. ஆனால் , அவளோ சரணை விரும்பினாள் . இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்த உடனேயே.. படப்பிடிப்பை பற்றி கற்க மேலைநாட்டிற்கு பறந்துவிட்டான் . ஆரவ்.. சரண்.. இருவரும் மான்சியின் மீது கொள்ளை பிரியம் வைத்தவர்கள்.. ஆனால் என்ன.. ஆரவ் , ஆரம்பம் முதலே மான்சியின் தாயை துச்சமாக நினைப்பவன்.. சரணோ , அவளை போன்றே மரியாதைக்குரிய நபராய்.. மதிப்பவனாக இருந்தான் . எக்கணம் , இருவருக்கும் விவாகரத்து என்று கேள்விப்பட்டானோ.. மறுநொடி , அவளோடு துணை நின்றான்.. நிற்கிறான் ..
தாமரைக்கும் , அவனை பற்றி நன்கு அறிவாள்.. மிகவும் நல்லவன்.. ஆனால் , எப்பொழுதும் அவளிடத்தில் வம்பு செய்துக் கொண்டிருப்பவனாகவும். அடாவடியாகவும் இருந்தது.. ஒருபுறமும்.. அவளுக்கு மிகவும் பிடித்தமான மித்ரனுக்கு போட்டியாக , மான்சியிடத்தில் காதலை கூறியதில் இருந்தே.. பிடித்தம் இல்லாதவனாகி போனான்..
இந்த ஐந்தாறு ஆண்டுகளாக , மான்சியின் பாதுகாவலனாக இருப்பவனும் அவன் என்று புரிந்தே இருந்தாலும்.. சரணிற்கு போட்டியாக நினைத்து எப்பொழுதும் மறைக்காமல் அவனிடத்தில் எரிச்சலுடனே நடந்துக் கொள்வாள் . ஆரவ்விற்கு , தாமரை மிகவும் பிடித்தமான சுட்டிப்பெண் என்றால் , தாமரைக்கோ.. பிடிக்கவே.. பிடிக்காத நலவிரும்பி..
தாமரைக்கும் கவனம் முழுவதும் தட்டில் இருந்தாலும் , அவனை பற்றிய நினைப்பிலேயே இருந்தாள்.. அவனைப் பற்றி யோசித்தாலும்.. மிகவும் பிடித்தமாகவே.. அவன் செய்து கொடுத்த பிரியாணியை.. அவனை முறைத்துக் கொண்டே நன்கு சாப்பிட்டாள்.அவளின் செயலை கண்டவனோ ,
" டேய் சரண்.. உன் பொண்டாட்டி பாப்பான்னாலும்.. பாப்பாதான்டா..", என்று மனதோடு சொல்லிக் கொள்ள.. தன் போல் அந்த நினைப்பில் உதடுகளும் விரிய.. கேலியாக , தன்னை நினைத்தே சிரிக்கிறான் .. என்று கண்டு கொண்டவளாக..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...