பகுதி - 94
சரண் எதிர்பார்த்து தவித்து இருந்த நேரத்தில் தாமரை காட்ட மறுத்த உரிமையை.. இப்பொழுது , வெறுப்பின் உச்சியில் இருக்கையில் , அவள் காண்பிக்க.. ரசிக்கவும் முடியாமல்.. ஏற்கவும் முடியாதவனாக இருந்தான் .
தாமரை இயல்பாக கணவனிடம் காட்டிய கோபம் கூட , அவனுக்கு தன்மானத்தை சீண்டியதாக இருக்கவே ,
" ஓ.. அப்போ.. மேம் என்ன சொல்ல வரீங்க..", என்று நொடிக்குள் ரௌத்திரத்தை தாங்கியவனாய் கண்கள் சிவக்க கடிந்த பற்களுக்கு இடையில் உறுமியதில் ,
தாமரையின் நா மேல் அன்னத்துடன் ஓட்டிக் கொண்டு.. நா உலந்ததாய்.. " நா.. நா..", என்று பெரிதும் தடுமாறியவளாய் நின்று இருந்தவளின் புஜத்தில் கரம் பதித்து , அழுத்தமாக பிடித்து இழுத்தவாறே..
" என்ன சொன்ன..", என்று கேள்வியாலேயே , வெட வெடக்க செய்திருக்க..
உதடு துடித்து.. உடல் நடுங்கியவளுக்கோ.. சற்றுமுன் துளிர்த்த சினமும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்திருந்ததாய்.. அவனின் பிடியில் தெரிந்த ஆத்திரத்தில்.. அதிகமாக அஞ்சியவள் , வாய் திறக்கும் வரை விட மாட்டான் என்பதால் , வர வைத்திருந்த தைரியத்துடன் ,
" நா.. நா.. தப்பா.. நி..னை..ச்..சு..", என்று கோர்வை அற்ற வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருப்பதையும்.. முழுவதும் அவள் முடிக்கும் வரையும் பொறுமை அற்றவனாக ,
" டிட் ஐ ஸே ஸோ..! ( Did i say so ! ) " என்று அவன் புருவம் உயர்த்த.. பிடித்திருந்தவளை மேலும் இறுக்கியதில்.. தாமரைக்கோ.. வெளிப்படையாகவே உடல் வெடவெடக்க துவங்கிவிட்டது .
" ஏன் டீ.. அப்படி பண்ணின.. எப்படி டீ..?" என்று அவள் முன் குனிந்து ஆத்திரத்தை அடக்க முயன்றவனாய்.. வார்த்தைகளை வெளியிட.. அச்சிறு கோதையின் நெஞ்சமோ , வெடித்து சிதறியதாய்..
தன் மேல் தவறே இல்லாத போதும்.. அவனின் துடிப்பிற்கு , அவளும் ஒருவகையில் காரணமாக இருந்ததை.. இருப்பதை.. தெரிந்த நாளில் இருந்தே.. புழுவென துடிப்பவளுக்கு.. கண்முன் அவனின் வலியையும் சீற்றத்தையும் கண்ட பிறகோ.. தாங்கிக் கொள்ள முடியாதவளாய் ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...