பகுதி - 93
நடிகை ஜாஸ்.. இருபது ஆண்டுகளாக சீனியர் முன்னணி நடிகையாக இன்றும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.. நாற்பது வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாதவளாக வலம் வருபவள் .
ஏனோ , இளம் நடிகர்களுடன் ஹீரோயினாக நடிப்பதாலோ என்னவோ.. சரணிடம் நெருக்கம் காண்பிக்க எவ்வித தயக்கங்களும் அவளுக்கு உண்டாகவில்லை . ஆனால் , சிறு பயம் இருந்தது மட்டும் முற்றிலும் உண்மையாக இருந்தது . அவனை நெருங்குவதோ.. ஏன் நேரில் சந்திப்பது என்பதோ அறிதான செயலாக தங்கள் வட்டாரங்களுக்குள் குறிப்பிடுவதாலேயே அதனை.. தன் பெயர்.. புகழால்.. உடைத்து எறிய வேண்டும் என்பதை சவாலாகவே நினைத்து இங்கு வந்திருந்தாள் .
ஜாஸ் ஒன்றை மறந்திருந்தாள் . ஆர்.பீ. எஸ்ஸின் தொழில் சாதூர்யத்தை பற்றி.. தன் சொந்த விருப்புகளை என்றுமே தொழிலில் திணிக்க விரும்பாதவன் என்பதையும் அறியாதவளாய் இருந்தாள்.. அவ்வளவு எளிதாக எவரையும் பகைத்துக் கொள்ள நினைக்காதவன் என்றும்.. . அவனின் பகைமையும்.. அவனுடைய எதிரிகளால் வாய்விட்டு பகிர்ந்துக் கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கும் என்பதும் .
சரணும் ஜாஸ் பற்றி நன்கு அறிவான் . ஆனால் , தன்னை காண இத்தனை துணிச்சலுடன் வருகை தந்திருப்பதற்கான காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டி இருக்கவே.. மௌனமாய், அவளை சந்திக்க சம்மதித்தான் . எல்லைகளை தாண்டுபவள் என்று நன்கு தெரிந்ததே.. அதனை , தன்னிடமும் காட்டுவாள் என்று நினைக்கவில்லை . அதேசமயம் , அவனின் அழுத்தமான ஆளுமையும்.. அவளது எல்லையை அறிய முற்படவே அமைதி காக்க செய்திருந்தது .
தீண்டியும் தீண்டாமலும் பதித்த இதழ் ஒற்றல்.. சரணிடம் காட்டிய முன்னோட்டம் என்பதை அறியாதவன் இல்லை . அதேசமயத்தில் , தான் அனுமதி வழங்காமல் அவனது அறைக்குள் வைஷ்ணவாலேயே நுழைய முடியாது என்பதால்.. அலட்சியமாகவே , அவளை கவனித்தவனாக இருந்தான் . எதிர்பாராத நிகழ்வாய் , அவன் மனைவி தாமரை முறியடிப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...