வா.. வா.. என் அன்பே - 43

1.4K 42 10
                                    

பகுதி - 43

சரண் மனைவியுடன் பேசி முடித்ததும்.. துரிதமாக வேலைகளை முடிக்க பார்க்க.. ஏற்கனவே , அவனிடம் பேட்டி எடுப்பதற்காக.. ஒருவர் காத்திருப்பதாக.. கூறிக் கொண்டு நின்ற வைஷ்ணவையும் மணியையும் பார்த்தவனாய் , நன்கு முறைத்தவன்.. அதற்குண்டான காத்திருப்பு அறைக்கு அழைத்து வர சொல்லினாலும் , " வௌவ் லாங்..", என்று உறுமவும் தவறவில்லை..

" சீக்கிரமா முடிக்க சொல்றேன் ஸார்..", என்று பவ்யமாக கூறவே.. போ.. என்று சைகையில் காட்டியவன்.. பார்த்துக் கொண்டிருந்த வேலையில் முடித்து.. பத்து நிமிடங்களுக்கு பிறகு.. அங்கு தன் வேகம் குறையாமல் நுழைந்திருக்க.. கேமரா.. லைட் என்று  அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் மூவர் காத்திருந்தார்கள்‌.

தொகுப்பாளரோடு மேலும் இருவர் இருக்க.. " ஹாய்..", என்று அளவான புன்னகையில் வரவேற்க.. வியந்து நின்றிருந்தார்கள் ‌ .

தொகுப்பாளானாக இருந்தவனின் மனதில் தோன்றியது.. " ப்..ப்..பா.. ஆ..", என்பதவாகவே இருந்தது ..  அவனுடைய ஆளுமையைக் கண்டு.. அந்த வியப்பை மறைக்காமல் வெளியிடவும் தவறவில்லை.. அதற்கு , ஒரு அளவான இதழ் விரிப்பை கொடுத்து.. அமருமாறு சொல்லி.. மரியாதை நிமித்தமாக சில உரையாடல்களை நிகழ்த்தியவன்..

" கேமிரா ஆன் பண்றதுக்கு முன்னாடி.. என்ன கேட்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..? ", என்றான் சரண்மித்ரன்..

" ஓ.. ஷுயூர் ஸார்.. நீங்க கேட்டு இல்லாமலா..", என்று கலகலப்பு என்ற பெயரில்.. அதிகமாக , வழிந்தவனின் செயலைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தாலும்.. முகத்தை இயல்பு மாறாமல் வைத்திருக்க.. வந்தவனோ , அலைபேசியை எடுத்து நீட்டினான் .

" நீங்களே படிச்சிடுங்க.. "

" ஷ்யூர்.. வாசிக்கலாமா.. என்று ஒருமுறை பணிவோடு கேட்பது போல் கேட்டு.. தொடர்ந்தான்..   ஃபர்ஸ்ட் க்வெஷ்டீன் ஸார்.. முன்னனி நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு சுலபமாக படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் தான்.. உங்களை போன்ற வாரிசு நடிகர்கள் உங்களுடைய  நடிப்பில் அலட்சியம் காட்டுகிறீங்களா..?", என்றான் முதல் கேள்வியாக.. அடுத்து என்பது போல் இருக்கவும்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now