பகுதி - 35
தாமதமாக கண் விழித்தவளுக்கு.. உடலை அசைக்கவும் முடியவில்லை.. அவ்வளவு அசதியாக இருந்தது.. ஆனால், இது போன்ற, நிம்மதியான உறக்கத்தையும் சிறுவயது முதல் தூங்கியதுமில்லை. விழித்த நிலையில் அப்படியே படுக்கையில் கிடந்தவளுக்கு முதலில் முன் தின இரவை பற்றிய நினைவே இல்லாமல்.. எழ முயன்றபொழுதே.. அதன் ஞாபகம் தளர்ந்திருந்த ஆடைகளால் நினைவுக்கு வர.. வேகமாக , எழுந்து அமர்ந்துவளுக்கோ.. நேற்றைய நிகழ்வில் உண்டான குற்றணர்வும்.. தவிப்புமே மேலோங்கி இருந்தது .
' அய்யோ..', என்று தன் உள்ளங்கையை வாயில் வைத்து.. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அசைப்போட்டவளுக்கோ.. செய்து வைத்த செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை . " நா.. நா..னா..", என்று பரிதவித்தது.. அந்த பேதை நெஞ்சம்.. யாருக்கோ செய்த துரோகம் போல் துடிதுடித்து போனாள் .
சரணின் சமாதானம்.. அதை தொடர்ந்து அவன் அணைப்பு.. அவள் மயிலிறகாய் வருடிய இதழ் முத்தத்தால் முதன்முதலாக.. தன்னை மறந்து தொலைந்ததை நினைவு கூர்ந்தவளுக்கு.. அவன் விழிகளில் வழிந்த தாபத்தையும்.. ஆசையும் புரிந்துக் கொண்ட பின் , அதை மறுக்கும் எண்ணம் வராமல் , இசைந்தவளாய் கிடந்ததும்.. அவனால் ஏற்பட்ட மாற்றத்தின் கணம் தாள முடியாமல்.. படுக்கை விரிப்பை இறுக்கிப் பிடித்து தத்தளத்தவளின் கரத்தை.. எடுத்து தன்மேல் போட்டுக் கொண்டவனின் செயலால் முழுதாய் தன்னிலை மறந்ததும்.. நாணம் தடுத்தாலும்.. உரிமையாக ஒன்றிணைந்து நினைவு வர.. பெரும் குற்றம் செய்தவள் போல்.. தன் கால்களை மடக்கி.. அழுகையில் குலுங்க.. ஒருவரின் முகத்தையும் ஏறிடும் துணிவு வராமல்.. சுவற்றோடு ஒண்டிக் கிடந்த நிலையிலேயே , " நானா.. நானா.. இப்படி.. என்னால எப்படி முடிஞ்சது.. அவரோட.. நா..ன்.. போய்.. அ..ம்..மா.. பெரிய பாவம் பண்ணீட்டேனே..", என்று வாய்விட்டு புலம்பி அழுதவளையே , சரண் பார்க்க நேரிட்டது .
யாரோ , நுழைவது போல் இருக்க.. பட்டென்று நிமிர்ந்து பார்த்தால்.. ருத்திரமூர்த்தியாக , நின்றிருந்தான் அவன் . " பெரிய பாவம் பண்ணீட்டேனே..", என்று கொதிக்கும் எண்ணெய்யை முகத்தில் வீசியது போல் அவளது வார்த்தைகள்.. ஆசையுடன் மனைவியை காண வந்தவனுக்கு சொற்களால் திராவகத்தை அள்ளி தெளித்திருந்தாள் . இதற்கு முன் இரு முறைக்கு மேல் அவளோடு கூடி பிரிந்திருந்தாலும்.. நேற்றைய நெருக்கம்.. ஆத்மார்த்தமான சங்கமம்.. அவனுக்கு அவள் மட்டுமே முதல் உறவு அல்ல.. அதுவும் இந்த ஐந்தாண்டுகளில் பல பெண்களும் உண்டு.. ஆனால், முதல் முறையாக.. நாணத்தில் குழைந்து.. எவ்வித தடையும் விதிக்காமல்.. அவன் கடத்தும் உணர்வுகளோடு போராட முடியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்தவளின் செயலில்.. அவன் அவளை வென்றுவிட்ட கர்வம் கொண்டான் என்றால் மிகையில்லை.
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...