பகுதி - 75
எதை பார்த்தாலும் , எதை தொட்டாலும் ஆட்டுவிக்கும் தாமரையின் நினைவுகளை... அவ்வளவு எளிதில் அவனால் கடந்துவிட முடியவில்லை . மான்சியால் ஏற்பட்ட வலியை குடிக்குள் மூழ்கி மறந்திருந்தவனால் , இவளிடம் அனைத்திலும் தோற்றுதான் போனான் . கண்களை மூடினாலே மிரண்ட பார்வை.. கெஞ்சும் முகம்.. துடிக்கும் உதடுகள்.. என்று பதிந்த ஒவியமாக வலம் வர.. கசக்கிப் பிழியும் உணர்வில் இருந்து தப்பிக்க முடியவில்லை .
தொய்ந்து அமர்ந்தவனுக்கு நாளைய பணிகளின் அட்டவணை அணி வகுத்து நின்றிருக்க.. தன் புத்தியின் திசையை மாற்ற நினைத்தவனாக , பணிக்குள் மூழ்க நினைத்து.. கையெப்பமிட வேண்டிய கோப்பைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.. மூன்றாவதாக இருந்ததோ ,
காற்றில் படபடத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த வங்கியின் காசோலை .அதனை பார்த்ததும் , சிறிதுநேரம் உறங்கிக் கொண்டிருந்தது.. செல்லப்பிராணி விழித்து துள்ளிக் குதித்தது போல்.. மீண்டும் , தாமரையின் அசைவுகள் . மென்மையாக , அவன் விரல்கள் காசோலையை வருட.. மூளையின் யோசனைகளும்.. அவளுடன் கழித்த உன்னத நினைவுகளை தாங்கியதாய்..
காதலில் கெஞ்சலும் மிஞ்சலும் சுகம்.. அந்த சுகங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தாள் தாமரை.
மனைவியின் மீது இருக்கும் நேசத்தை உணர்ந்த தருணத்தில் இருந்து , சரண் மித்ரன் தயக்கம் சிறிதுமின்றி , நாள் தவறாமல் அவள் இடத்தில்.. அவன் காதலை உணர்த்திக் கொண்டே இருக்கவும் தவறியதில்லை .
அதுபோலவே , ஒருமுறை , வேலையின் காரணமாய் இரு தின வெளியூர் பயணத்தை முடித்து வீடு திரும்பி வந்தவன்.. அன்றைய இரவில் , எப்பொழுதும் போல் அவளின் விலகலை கண்டு மனம் சுருங்கினாலும் , வெளிக்காட்டாதவனாய்.. பின்னிருந்து அவளது இடையை இறுக்கிக் கொள்ள.. எப்பொழுதும் போல் வெடவெடத்தவளாய்.. மிரண்ட விழிகளால் ஆடவனை வீழ்த்த.. அழுத்தமாக அவள் இதழில் முத்தம் பதித்து , அவர்கள் உறவை நினைவுப்படுத்து முனைப்பில் இறங்க ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...