❤️பகுதி - 116 ❤️
குளிர்க்காற்று எங்கும் வீச , இரவு பனியின் ஈரங்களும் ஆதவனின் வருகையால் மெல்ல மெல்ல மாயமாகிப் போக , முழுதாய் விடைப் பெற்று செல்ல விரும்பாமல் , நீர்த்துளிகளாய் புற்களிலும் , இலைகளிலும் அவைகள் முத்துக்களாய் அமர்ந்து செல்லம் கொஞ்சிக் கெண்டு இருக்க , பறவைகளின் ஊர்வலம் வானில் நடைப்பெற , புன்னகைக்கும் முகத்துடனே அழகிய ஆதவன் தன் காதலியோடு கரம் கோர்த்து.. அனைத்து உயிரினங்களையும் எ விழிக்கச் செய்து இருந்தான் .
காலை உணவு உண்பதற்காக , சாப்பிட அமர்ந்த விக்கியிடம் , மிகவும் அமைதியாகவே உணவு பரிமாறிக்கக் கொண்டு இருந்த விக்கியின் அன்னை லதாவின் முகத்தில் இருந்த அழுத்தம் , அவனுக்கு காலையில் இருந்த தலைவலியை கூடுதலாகிக் கொண்டு இருந்தது .
சில நிமிடங்களுக்கு மேல் , அன்னையின் அமைதியின் கணம் தாள முடியாதவனாய் ,
" என்ன ம்மா இது.. காலேலையே இவ்வளவு டென்ஷன் பண்றீங்க . காலங்கார்த்தால முகத்தை இப்படி தூக்கி வச்சிட்டு இருந்தா.. வெளில போறவன் எப்படி ம்மா நிம்மதியா என் வேலைய பார்ப்பேன் ..", என்று பிட்டு இட்டிலியை தட்டில் மீண்டும் வேகமாகவே தட்டில் தூக்கிப் போட்டு எரிச்சலுடன் வினவ ,
" ஏன் வீட்டுல நாங்க வேலைப் பார்க்கல..", என்று முணுமுணுப்புடன் சமையல் அறைக்குள் மீண்டும் நுழைந்து குடிப்பதற்காக தண்ணீர் பாட்டிலுடன் வந்து இருந்தார் .
" ம்மா.. ப்ளீஸ் ம்மா. என்னை நீங்களும் புதுசா டென்ஷன் பண்ணாதீங்க..", என்று தன் எரிச்சலையும் மறைக்க முடியாது அப்பட்டமாகக் காட்டிட ,
" நீங்களும்னா வேற யாரு..", என்று புருவம் சுருக்கி வினவிய லதாவின் முகத்தை ஏறிட முடியாமல் தடுமாறியவனாய் , உண்ணும் உணவில் பார்வையை பதித்தவவனிடம் , மீண்டும் அதே கேள்வியை கேட்டவராக மகனை அழுத்தமாக பார்த்து இருந்தவரை தவிர்க்க முடியாதவனாய் ,
" இப்போ , ஏன் ம்மா திடீர்னு கல்யாணத்துக்கு இவ்வளவு அவசரம் காட்டுறீங்க.. இவ்வளவு நாள் பொறுமையா தான இருந்தீங்க..", என்று தன் பொறுமையை இழந்தவனாக தாயிடம் எரிந்து விழுந்தான் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...